பக்கம் எண் :

 மீட்சிப் படலம்595

ஓட; தனிமை நீங்கி காடு உறைந்து உலைந்த மெய்யோ? -
இராமனைப் பிரிந்த தனிமையிலிருந்து  விடுபட்டு   அவனுடனே
சென்று காட்டின்கண் அவனோடு தங்கி  வருந்திய இலக்குவனது
உடம்போ; கையறு கவலை கூர  நாடு  உறைந்து  உலைந்து
மெய்யோ
- செயலற்ற பிரிவுத்துன்பம் மேலும் மேலும் மிகுதலால்
அயோத்தி   நாட்டு   நந்திக்   கிராமத்தில்   தங்கி   உண்பதும் 
உறங்குவதும் இன்றி வருந்திய பரதனது உடம்போ;  நைந்தது?-
எது மிகவும் வருந்தியது;என்று உலகம் நைய - என்று உலகம்
இருவரையும் ஒருசேரப் பார்த்து  வருந்தும்படி;   தாள்   தொடு
தடக்கை ஆரத் தழுவினன்
- முழந்தாள் அளவு நீண்ட தன்
கைகளால் நன்றாகத் தழுவிக் கொண்டான்.
 

பரதன் இலக்குவனைத் தழுவி நின்ற காட்சி கண்டு உலகம்
வருந்தியபடி. 
 

(330)
 

சத்துருக்கன் மூவரையும் பணிதல்
 

10282.

மூவர்க்கும் இளைய வள்ளல், முடிமிசை முகிழ்த்த 

கையன்,

தேவர்க்கும் தேவன் தாளும், செறி கழல் இளவல்  

தாளும்,

பூவர்க்கும் பொழிந்து வீழ்ந்தான்; எடுத்தனர் 

பொருந்தப் புல்லி,

வாவிக்குள் அன்னம் அன்னாள் மலர் அடித் தலத்து 

வீழ்ந்தான்.

 

மூவர்க்கும் இளைய வள்ளல்- மூவர்க்கும்  இளையவனாகிய
சத்துருக்கன்; முடிமிசை  முகிழ்த்த கையன் - தலைமேற் கூப்பிய
கையுடையவனாய்; தேவர்க்கும் தேவன்  தாளும்   -   இராமன்
திருவடி; செறிகழல் இளவல் தாளும் -  கட்டிய   கழல்  உடைய
இலக்குவன்  திருவடி;   பூவர்க்கம்   பொழிந்து   வீழ்ந்தான் -
ஆகியவற்றில் மலர்   மழை   பொழிந்து   விழுந்து   வணங்கினான்;
பொருந்தப்  புல்லி   எடுத்தனர் -   அவர்கள்   அவனை நன்கு
தழுவித்   தூக்கினர்   (பின்னர் அவன்);   வாவிக்குள்   அன்னம்
அன்னாள் மலர் அடித்தலத்து வீழ்ந்தான்
- பொய்கையில் வாழும்
அன்னம்  போன்ற  சீதையின்  மலர்  போன்ற திருவடிகளில் வீழ்ந்து
வணங்கினான். 
  

 (331)