பக்கம் எண் :

596யுத்த காண்டம் 

துணைவர்களை அறிமுகப் படுத்தல்
 

10283.

பின் இணைக் குரிசில்தன்னைப் பெருங் கையால் 

வாங்கி, வீங்கும்

தன் இணைத் தோள்கள் ஆரத் தழுவி, அத் 

தம்பிமாருக்கு,

இன் உயிர்த் துணைவர்தம்மைக் காட்டினான்;

இருவர் தாளும்,

மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர், வணக்கம் 

செய்தார்.

  

பின் இணைக் குரிசில்  தன்னைப்  பெருங்கையால்
வாங்கி 
- தன்    தம்பியும்    பரதனோடு    இணையாக
உள்ளவனும்   ஆகிய சத்துருக்கனைத் தனது நீண்ட கைகளால
எடுத்து; வீங்கும் தன் இணைத் தோள்கள் ஆரத் தழுவி-
பருத்த   தனது    இரண்டாகிய   தோள்கள்   முழுகும்படி
அணைத்து;    அத்தம்பிமாருக்கு    -   அந்த     பரத
சத்துருக்கனர்களுக்கு; இன்  உயிர்  துணைவர்   தம்மைக்
காட்டினான்
- இனிய உயிர் போன்ற தனது துணைவர்களாகிய
சுக்கிரீவ,  வீடணர்களைக் காட்டி அறிமுகம் செய்வித்தான்; மன்
உயிர்க்கு உவமை  கூர  வந்தவர்
- உலக உயிர்களுக்கு
உவமைச் சிறப்பு உண்டாகும்படி வந்தவர்களாய அவர்கள்;
இருவர் தாளும்- பரத சத்துருக்கனர் தாள்களை;  வணக்கம்
செய்தார்
- வணங்கினார்கள்.
 

துணைவர் என்பது இருவரைக் குறித்தது. குகனையன்று. அவன்
முன்பே அறிமுகமாதலின். 
 

(332)
 

10284.

குரக்கினத்து அரசை, சேயை, குமுதனை, 

சாம்பன்தன்னை

செருக் கிளர் நீலன்தன்னை, மற்றும் அத் 

திறத்தினோரை,

அரக்கருக்கு அரசை, வெவ்வேறு அடைவினின் 

முதன்மை கூறி,

மருக் கமழ் தொடையல் மாலை  மார்பினன், பரதன், 

நின்றான்.*

 

மருக்கமழ் தொடையல் மாலை மார்பினன் பரதன்- மணம்
வீசும் கட்டமைந்த மாலை அணிந்த மார்பினை உடைய பரதன்;