குரக்கினத்து அரசை - சுக்கிரீவனை; சேயை - அங்கதனை; குமுதனை சாம்பன் தன்னை செருக்கிளர் நீலன் தன்னை-; மற்றும் அத்திறத்தோரை - வேறு அத்தகையவர்களை; அரக்கருக்கு அரசை- வீடணனை; வெவ்வேறு அடைவினின்- அவரவர்க்கு உரிய முறைப்படி; முதன்மை கூறி - உபசார வார்த்தைகள் கூறி; நின்றான். |
(333) |
சுமந்திரன் வருதல் |
10285. | மந்திரச் சுற்றத்துள்ளார் தம்மொடும், வயங்கு |
| தானைத் |
| தந்திரத் தலைவரோடும், தமரொடும், தரணி ஆளும் |
| சிந்துரக் களிறு போல்வார் எவரொடும், |
| சேனையோடும், |
| சுந்தரத்தடந் தோள் வெற்றிச் சுமந்திரன் |
| தோன்றினானால்.* |
|
சுந்தரத் தடந்தோள் வெற்றிச் சுமந்திரன்- அழகிய அகன்ற தோள்களை உடைய வெற்றியுடைய சுமந்திரன் என்னும் முதல் அமைச்சன்; மந்திரச் சுற்றத்துள்ளார் தம்மொடும்- மந்திராலோசனைச் சபையில் இருத்தற்குரியோர்களோடும்; வயங்கு தானைத் தந்திரத் தலைவரோடும்- விளங்கிய சேனைத் தலைவர்களோடும்; தமரொடும் - ஏனைய சுற்றத்தினரோடும்; தரணி ஆளும் சிந்துரக் களிறு போல்வார் எவரொடும் - உலகை ஆளும் சிந்தூரம் அணிந்த ஆண்யானை போன்ற மன்னர்களோடும்; சேனையோடும் தோன்றினான். |
ஆல் - அசை. |
(334) |
10286. | அழுகையும், உவகைதானும் தனித்தனி அமர் செய்து |
| ஏற, |
| தொழுதனன், எழுந்து விம்மி, சுமந்திரன் |
| நிற்றலோடும், |
| தழுவினன் இராமன், மற்றைத் தம்பியும் அனைய |
| நீரான், |
| 'வழு இனி உளது அன்று, இந்த மா நிலக்கிழத்திக்கு' |
| என்றான்.* |