பக்கம் எண் :

598யுத்த காண்டம் 

சுமந்திரன்-; அழுகையும் உவகை தானும்  தனித்தனி அமர்
செய்து ஏற
-   அழுகையும்     மகிழ்ச்சியும்    தனித்தனியாக
ஒன்றோடொன்று போட்டியிட்டு மேலே மிக;  எழுந்து  விம்மி
தொழுதனன் நிற்றலோடும்
- நின்று துடித்து  வணங்கி  நின்ற
அளவில்; இராமன் தழுவினன் - இராமன் தழுவினன்; மற்றைத்
தம்பியும்   அனைய  நீரான் 
- இலக்குவனும் அதுபோலவே 
தழுவினன் (பின்னர் சுமந்திரன்);  இந்த மாநிலக் கிழத்திக்கு-
இந்த நிலமகளுக்கு;  இனி  வழு  உளது  அன்று என்றான் -
இனித்துன்பம் இல்லை என்று மகிழ்ச்சி கூறினான்.
 

இறுதியாக வனத்தில் இராமனைவிட்டு வந்தவனாதலின்
மீண்டும்  காணப்   பெற்றபோது   அழுகை  உவகையும்
போட்டியிடுவனவாக ஆனான் சுமந்திரன். 
 

(335)
 

10287.

'ஏறுக சேனை எல்லாம் விமானமீது' என்று, 

தன்போல்

மாறு இலா வீரன் கூற, வந்துள அனிக வெள்ளம்

ஊறு இரும் பரவை வானத்து எழிலியுள்  

ஒடுங்குமாபோல்

ஏறி, மற்று இளைய வீரன் இணை அடி தொழுதது 

அன்றே.

 

தன் போல் மாறு இலா வீரன்- தனக்கு ஒப்பாக மற்று ஒன்று
இல்லாத பெருவீரனாகிய இராமபிரான்; சேனை எல்லாம்  விமானம்
மீது ஏறுக என்று கூற
- எல்லாச் சேனைகளும் விமானத்தின் மேல்
ஏறட்டும் என்று கட்டளையிட; வந்துள அனிக வெள்ளம்  -  வந்த
சேனைப் பெருக்கு;  ஊறு  இரும்  பரவை  வானத்து  எழிலியுள்
ஒடுங்குமா போல்
- மேலும் மேலும்  ஊறுகின்ற  கடல்  விண்ணில்
உள்ள மேகத்துள் ஒடுங்குவதைப் போல; ஏறி  -  விமானத்தில்  ஏறி;
இளைய வீரன் இணை அடி தொழுதது- இலக்குவனது திருவடிகளை
வணங்கியது.
 

அன்று, ஓ - அசை.  
 

(336)
 

10288.

'உரைசெயின், உலகம் உண்டான் மணி அணி 

உதரம் ஒவ்வா,

கரை செயல் அரிய வேதக் குறுமுனி கையும் ஒவ்வா,