பக்கம் எண் :

6யுத்த காண்டம் 

வெந்த புண்ணிடை வேல் பட்ட வெம்மையான் - வெந்த
புண்ணில்   வேல்   பட்டாற்    போன்ற    கொடுந்துன்பத்தை
அடைந்தவனான இராவணன்; 'மைந்தவோ!' எனும் 'மாமகனே!'
எனும்
-  'மைந்தா ஓ!'   என்பான்;  சிறந்த  மகனே!  என்பான்;
'எந்தையோ!' எனும்; 'என் உயிரே!' எனும் -  'என் அப்பா
ஓ!' என்பான்;   'என் உயிரே!' என்பான்; 'உனை முந்தினேன்;
நான்  உளனோ!'  எனும்
- 'உனக்கு   முன்னர்   உயிர்  விட
வேண்டியவனாகிய நான் இன்னும் இருக்கின்றேனே' என்பான்.
 

கும்பகருணனை இழந்த துன்பம் வெந்தபுண் போன்றது எனவும்,
இந்திரசித்தனை இழந்த துன்பம் அப்புண்ணில் வேல் நுழைந்தது
போன்றதெனவும் கொள்க. 'ஓ' என்பது இரக்கக் குறிப்புணர்த்தும் 
இடைச் சொல்.  மகனை  எந்தை  என்பது அன்பு  பற்றி வந்த 
வழுவமைதி. 
 

(10)
 

9196.

'புரந்தரன் பகை போயிற்று அன்றோ!' எனும்; 

'அரந்தை வானவர் ஆர்த்தனரோ!' எனும்; 

'கரந்தை சூடியும், பாற்கடல் கள்வனும், 

நிரந்தரம் பகை நீங்கினரோ!' எனும். 

 

புரந்தரன் பகை போயிற்று அன்றோ!' எனும்- 'இந்திரனது
பகை  போயிற்று  அல்லவோ!'  என்பான்;  'அரந்தை வானவர்
ஆர்த்தனரோ!' எனும்
;- (நம்மால்) துன்பமடைந்த தேவர்கள்
(துன்பம் நீங்கி மகிழ்ச்சியால்) ஆரவாரித்தனரோ?' என்பான்; 
'கரந்தை சூடியும் பாற்கடல் கள்வனும்
- 'கரந்தையைச் சூடிய 
சிவனும் பாற்கடலில் ஒளிந்துகொண்டுள்ள திருமாலும்; நிரந்தரம் 
பகை நீங்கினரோ!' எனும்
- நிரந்தரமாகத் தம் பகை நீங்கப் 
பெற்றனரோ?' என்பான்.
 

அரந்தை -  துன்பம்,  கரந்தை -  கரந்தை  மலர்,
திருநீற்றுப்பச்சை   நிரந்தரம் -  இனி   எப்பொழுதும்,
இந்திரன், சிவன், திருமால் என்போர் இந்திரசித்தனுக்கு
அஞ்சி அடங்கி இருந்தவர் இனி அச்சம் தீர்ந்து மகிழ்வர்
என்றவாறு. 
 

(11)
 

9197.

'நீறு பூசியும் நேமியும் நீங்கினார், 

மாறு குன்றொடு வேலை மறைந்துளார், 

ஊறு நீங்கினராய், உவணத்தினோடு 

ஏறும் ஏறி, உலாவுவார்' என்னுமால்.*