பக்கம் எண் :

60யுத்த காண்டம் 

ஊழிக்காற்று போல விரைந்து; கடப்பவன் வாலி என்போனை
அறிதிர் அன்றே?
- கடந்து செல்பவனாகிய வாலி என்பவனை
அறிவீரன்றோ? எழு குன்றமும் எடுக்குறும் மிடுக்கனை - ஏழு 
குல மலைகளையும் எடுக்கவல்ல மிடுக்கினை உடைய அவ்வாலியை;
இந்நாள் ஓர்   பகழி   பாழி மார்பு அகம் பிளந்தது உயிர்
குடித்தது
- இந்நாளில் இராமனுடைய ஓர் அம்பு வலிமை மிக்க
மார்பகத்தைப் பிளந்து உயிரைக் குடித்தது.
 

ஏழு மலைகளாவன, கயிலை, இமயம், மந்தரம், விந்தம்,
நிடதம், ஏமகூடம், கந்தமாதனம் என்பவை. 
 

(41)
 

9288.

'இங்கு வந்து நீர் வினாயது என்? எறி திரைப் 

பரவை

அங்கு வெந்திலதோ? சிறிது அறிந்ததும் இலிரோ? 

கங்கைசூடிதன் கடுஞ் சிலை ஒடித்த அக் காலம், 

உங்கள் வான் செவி புகுந்திலதோ, முழங்கு ஓதை? 

 

நீர் இங்கு வந்து வினாயது என்-  நீர் (இரு மனிதரின்
ஆற்றலைப்பற்றி) இங்கு வந்து வினவியது என்? எறி திரைப்
பரவை அங்கு வெந்திலதோ?
- இராமனுடைய அக்கினிக்கணையால்
அலை வீசுங்கடல் அங்கு வேகவில்லையோ? சிறிதும் அறிந்ததும்
இலிரோ?
- அது இராமனால் நிகழ்ந்தது என்பதைச் சிறிதும்
அறிந்ததும் இல்லீரோ? கங்கை சூடிதன் கடுஞ்சிலை ஒடித்த
அக்காலம்
- கங்கையைச்   சடையில் கொண்டுள்ள சிவனது
கடுமையான வில்லை (இராமன் சீதையை மணக்கும் பொருட்டு)
ஒடித்த அக்காலத்து; முழங்கு ஓதை உங்கள் வான் செவி
புகுந்திலதோ?
-  (அவ்வில்  ஒடிந்ததாலாய) முழங்கும்
பேரொலியானது உங்களது சிறந்த செவியில் புகுந்திலதோ?
 

கடல் வெந்தமை கண்டும், வில்லொடித்த ஓசையைக் கேட்டும்
இவற்றிற்குக் காரணம் தெரிந்திருக்க வேண்டிய நீர் இங்கு
வந்து வினவுவது என்? என்கின்றான் மாலியவான். 
 

(42)
 

9289.

'ஆயிரம் பெரு வெள்ளம் உண்டு, இலங்கையின் 

அளவில்,

தீயின் வெய்ய போர் அரக்கர்தம் சேனை; அச் 

சேனை