பக்கம் எண் :

604யுத்த காண்டம் 

மீன்இனம் மதியைச் சூழ்ந்த தன்மையின் விரிந்து  

சுற்ற,

பூ நிற விமானம்தன்மேல் மிதிலை நாட்டு அன்னம் 

போனாள்.

 

வானர மகளிர் எல்லாம்- வானரப் பெண்கள் அனைவரும்;
வானவர் மகளிராய் வந்து-  தேவ  கன்னிகையராய்  உருமாறி;
ஊனமில் பிடியும் - குற்றமற்ற பெண்யானை  மீதும்;  ஒண்தார்ப்
புரவியும்
- ஒள்ளிய மாலை பூண்ட  குதிரையின்  மீதும்;  பிறவும்
ஊர்ந்து
- (சிவிகை முதலிய) பிற ஊர்திகள் மீதும் ஏறிச் செலுத்தி;
மீன் இனம் - விண்மீன் கூட்டம்; மதியைச் சூழ்ந்த தன்மையின் 
விரிந்து சுற்ற
- நிலாவைச் சுற்றிய தன்மைபோல் சூழ்ந்துவர; பூ நிற
விமானம் தன் மேல்
- பொலிவுடைய விமானத்தின் மீது;மிதிலை
நாட்டு அன்னம் போனாள்
- மிதிலை நாட்டின் அன்னம் போன்ற
 சீதாபிராட்டி சென்றாள். 
 

(7)
 

10297.

தேவரும் முனிவர்தாமும் திசைதொறும் மலர்கள் சிந்த, 

ஓவல் இல் மாரி ஏய்ப்ப, எங்கணும் உதிர்ந்து வீங்கிக் 

கேவல மலராய், வேறு ஓர் இடம் இன்றிக் கிடந்த 

ஆற்றால்,

பூ எனும் நாமம், இன்று இவ் உலகிற்குப் 

பொருந்திற்று அன்றே.

 

தேவரும் முனிவர் தாமும் - வானவரும் முனிவர்களும்; 
திசை தொறும் மலர்கள் சிந்த- எல்லாத் திசைகளிலிருந்தும்
பூக்களைச் சொரிய; ஓவல் இல் மாரி ஏய்ப்ப - இடையறாது
மழை பொழிவதைப் போன்று; எங்கணும் உதிர்ந்து வீங்கி-
எல்லா   இடத்திலும்   பொழிந்து  பெருகி; கேவல மலராய் -
மலர்கள் மட்டுமேயாக நிறைந்து;  வேறு   ஓர் இடமின்றிக்
கிடந்த ஆற்றால்
- மற்றேதும் இடம் பெற முடியாமற் கிடந்த
தன்மையால்;இவ்வுலகிற்கு- இந்தப் புவிக்கு, இன்று - இந்த
நாளில்;பூ எனும் நாமம் - பூ என்கிற பெயர்; பொருந்திற்று
- பொருந்துவதாயிற்று; அன்று- அசை; - தேற்றம்; பூமிக்குப்
பூ என்னும் பெயரமைந்தமைக்குப் பிறிதொரு காரணம் கற்பித்தார்.
 

(8)