பக்கம் எண் :

 திருமுடி சூட்டு படலம்605

10298.

கோடையில் வறந்த மேகக் குலம் எனப் பதினால் 

ஆண்டு

பாடு உறு மதம் செய்யாத பணை முகப் பரும  

யானை,

காடு உறை அண்ணல் எய்த, கடாம் திறந்து  

உகுத்த வாரி

ஓடின, உள்ளத்து உள்ள களி திறந்து  

உடைந்ததேபோல்.

 

கோடையில் - முதுவேனிற் காலத்தில்; வறந்த - நீர் வறண்ட;
மேகக் குலம் என - முகிற் கூட்டம் போன்று; பதினால் ஆண்டு -
(நீண்ட) பதினான்கு ஆண்டுக்காலம்; பாடு உறு மதம் செய்யாத-
வெளிப்படுத்துகின்ற மதத்தைப் பொழியாமலிருந்த; பணைமுகப் பரும
யானை
- கொம்புகளை முகத்தில் பெற்ற சேணமமைந்த  களிறுகள்;
காடு உறை அண்ணல் எய்த- வனவாசம்  முடித்த  இராமபிரான் 
திரும்பி வந்தமையால்; கடாம் திறந்து உகுத்த  வாரி - கன்னம்
திறந்து   பொழிந்த   மதநீர்;   உள்ளத்து  உள்ள களி திறந்து
உடைந்ததே போல் 
 -  (அவற்றின்)   மனத்துக்குள்   அடக்கி
வைத்திருந்த களிப்பு உடைந்து வெளிப்பட்டது போல்;ஓடின -
பெருகி ஓடலாயிற்று.
 

முன்னர் நகர் நீங்கு படலத்துள், தான யானையும் களி துறந்தன
(கம்ப. 1806) என்றவர் இங்கு களிபெருகின என்றார். 
 

(9)
 

10299.

துரகத் தார்ப் புரவி எல்லாம், மூங்கையர் சொல் 

பெற்றென்ன,

அரவப் போர் மேகம் என்ன, ஆலித்த; மரங்கள்  

ஆன்ற

பருவத்தால் பூத்த என்னப் பூத்தன; பகையின் சீறும் 

புருவத்தார் மேனி எல்லாம் பொன் நிறப் பசலை 

 

பூத்த.

  

துரகத் தார்ப் புரவி எல்லாம் - கிண்கிணி  மாலை  யணிந்த
குதிரைகள் எல்லாம்; மூங்கையர் சொல் பெற்றென்ன- ஊமையர்கள்
பேசும் திறம் பெற்றாற் போலவும்; அரவப் போர்  மேகம்  என்ன -
ஆரவார ஒலி முழக்கும் மேகங்கள் போலவும்; ஆலித்த -கனைத்தன;
மரங்கள் - அனைத்து மரங்களும்; ஆன்ற