பருவத்தால் - பொருந்திய பருவ காலத்தில்; பூத்த என்ன- மலர்ந்தன போன்று; பூத்தன - விரிந்தன; பகையின் சீறும்- எதிரிகள் மீது சினந்து வளைவது போல் (வளையும்); புருவத்தார் - புருவத்தை உடைய மகளிர்; மேனி எல்லாம் - உடல் முழுவதும்; பொன் நிறப் பசலை பூத்த - தங்க நிறப் பசலை படர்ந்தது. |
பதினான்கு ஆண்டுகள் கனைக்காதிருந்த குதிரைகள் இராமன் வருகையால் கனைக்கலாயின. |
(10) |
இராமன் அரண்மனை உடைதல் |
10300. | ஆயது ஓர் அளவில், செல்வத்து அண்ணலும் |
| அயோத்தி நண்ணி, |
| தாயரை வணங்கி, தங்கள் இறையொடு முனியைத் |
| தாழ்ந்து, |
| நாயகக் கோயில் எய்தி, நானிலக் கிழத்தியோடும் |
| சேயொளிக் கமலத்தாளும் திரு நடம் செய்யக் |
| கண்டான். |
|
ஆயது ஓர் அளவில் - அந்தச் சமயத்தில்; செல்வத்து அண்ணலும் - எல்லாத் திருவும் பொருந்திய தலைவன் இராமபிரானும்; அயோத்தி நண்ணி- அயோத்தி நகரையடைந்து; தாயரை வணங்கி- தன் அன்னையாரைப் பணிந்து; நாயகக் கோயில் எய்தி - அனைத்துலக நாயகனான திருமாலின் ஆலயத்தை அடைந்து; தங்கள் இறையொடு- தங்கள் குலதெய்வத்தோடு; முனியைத் தாழ்ந்து- குல குருவான வசிட்டரையும் வணங்கி; நானிலக் கிழத்தியோடும் - நில மகளோடு; சேயொளிக் கமலத்தாளும் - சிவந்த ஒளிமிக்க தாமரைத் திருவும்; திருநடம் செய்யக் கண்டான் - (மிக்க உவகையோடு) களி நடம் புரிவதைக் கண்ணுற்றான். |
நாயகக் கோயில் - அரண்மனையும் ஆகலாம். |
(11) |
நகரமாந்தர் மகிழ்ச்சி |
10301. | 'வாங்குதும் துகில்கள்' என்னும் மனம் இலர், |
| கரத்தின் பல்கால் |
| தாங்கினர் என்ற போதும், மைந்தரும் தையலாரும், |