| வீங்கிய உவகை மேனி சிறக்கவும், மேன் மேல் |
| துள்ளி |
| ஓங்கவும், களிப்பால் சோர்ந்த உடை இலாதாரை |
ஒத்தார். |
| |
துகில்கள் வாங்குதும் என்னும் - ஆடைகளைக் களைந்து விட வேண்டும் என்னும்; மனம் இலர் - எண்ணமில்லாதவரான; மைந்தரும் தையலாரும் - (அயோத்தி நகர்) ஆண்களும் பெண்களும்; களிப்பால் - இராமனைக் கண்ட மகிழ்ச்சியால் (தளர்கின்ற ஆடையை); கரத்தின்- தம் கரங்களால்; பல்கால் தாங்கினர் என்ற போதும் - பன்முறையும் தாங்கி நின்றார்கள் என்ற போதிலும்; வீங்கிய உவகை- பெருகிய மகிழ்ச்சியால்; மேனி சிறக்கவும் - உடல் பூரித்தலால்; மேன்மேல் துள்ளி ஓங்கவும்- மேலும் மேலும் துள்ளிப் பாய்தலாலும் சோர்ந்த உடை இலாதாரை ஒத்தார்- நெகிழ்ந்த ஆடையற்ற திகம்பரரை ஒத்திருந்தார்கள். |
சமணரில் திகம்பரர் ஆடை அணியாதவர் ஆவர். |
(12) |
| 10302. | வேசியர் உடுத்த கூறை வேதியர் சுற்ற, வெற்றிப் |
| பாசிழை மகளிர் ஆடை அந்தணர் பறித்துச் சுற்ற, |
| வாசம், மென் கலவைச் சாந்து, என்று இனையன, |
| மயக்கம்தன்னால் |
| பூசினர்க்கு இரட்டி ஆனார், பூசலார் புகுந்துளோரும். |
| |
வேசியர் உடுத்த கூறை - கணிகையர் உடுத்திருந்த சேலையினை (தடுமாற்றம் நேர்ந்தமையால்); வேதியர் சுற்ற - வேதியர்கள் தரிக்கவும்; வெற்றிப் பாசிழை மகளிர் ஆடை- ஊடலில் வெற்றி கொள்ளும் பசிய பொன்னணிகள் அணிந்த பெண்களின் ஆடையினை; அந்தணர் பறித்துச் சுற்ற- அந்தணர் வலிந்து பறித்துச் சுற்றிக் கொள்ளவும்; வாசம் - நறுமணப் பொருள்களும்; மென் கலவைச் சாந்து - மெல்லிதாய் நறும் பொருள்கள் கலந்து அரைத்த சாந்தும்; என்று இனையன- என்னும் இவற்றை; பூசலார் - பூசிக் கொள்ளாது; புகுந்துளோரும் - வந்தவர்களும்; மயக்கம் தன்னால் - மக்களின் உவகை மயக்கத்தால்; பூசினர்க்கு இரட்டி ஆனார் - (மணப் பொருள்கள்) பூசியவரைக் காட்டிலும் இருமடங்கு அப்பிக் கொண்டார்கள். |
(13) |