பக்கம் எண் :

608யுத்த காண்டம் 

10303.

இறைப் பெருஞ் செல்வம் நீத்த ஏழ் - இரண்டு 

ஆண்டும், யாரும்

உறைப்பு இலர் ஆதலானே, வேறு இருந்து ஒழிந்த 

மின்னார்,

பிறைக் கொழுந்து அனைய நெற்றிப் பெய் வளை 

மகளிர், மெய்யை

மறைத்தனர் பூணின், மைந்தர் உயிர்க்கு ஒரு 

மறுக்கம் தோன்ற.

 

இறை-   ஆட்சியாகிய;   பெருஞ்செல்வம்   நீத்த   -
பெருந்திருவினை நீங்கிய; ஏழ் இரண்டு ஆண்டும் - பதினான்கு
ஆண்டுக் காலத்திலும்;யாரும் உறைப்பு இலர்  ஆதலானே -
அனைவரும் மனமகிழ்ச்சியற்றிருந்தவர்களாதலால்; வேறு இருந்து
ஒழிந்த
- (கணவருடன் கூடாது) தனித்திருந்து; கழித்த;   பிறைக்
கொழுந்து அனைய நெற்றி
- இளம் பிறை போன்ற நெற்றியினை
உடைய; மின்னார்- மின்னலைப்   போன்றவரும்;   பெய்வளை
மகளிர்
- வளையல் அணிந்தவருமான   பெண்கள்;   மைந்தர்-
ஆண்மக்களுடைய; உயிர்க்கு மறுக்கம்  எய்த-   உயிருக்குக்
கலக்கம் ஏற்படுமாறு;  மெய்யை  -   தம்   உடலை;   பூணில்
மறைத்தனர்
- அணிகலன்களால் மூடிக் கொண்டனர். 
 

(14)
 

10304.

விண் உறைவோர்தம் தெய்வ வெறியோடும், 

வேறுளோர்தம்

தண் நறு நாற்றம் தம்மில் தலைதடுமாறும் நீரால், 

மண் உறை மாதரார்க்கும் வான் உறை 

மடந்தைமார்க்கும்,

உள் நிறைந்து உயிர்ப்பு வீங்கி ஊடல் உண்டாயிற்று 

அன்றே.

 

விண் உறைவோர்  தம்-  வானுலகில் வாழ்கின்றவர்களின்;
தெய்வ வெறியொடும்- தெய்வீக நறுமணத்தோடும்; வேறுளோர்
தம்
- (மற்ற) மனித   உலகத்தவர்களின்;   தண்நறு   நாற்றம்-
குளிர்ந்த நறுமணம்; தம்மில் தலைதடுமாறு நீரால்  -   தமக்குள்
கலந்து  வீசும்   தன்மையால்;   மண்  உறை   மாதரார்க்கும் -
மண்ணுலகத்துப் பெண்களுக்கும்; வான் உறை மடந்தைமார்க்கும்
- விண்ணுலக