மாதர்கட்கும்; உள் நினைந்து உயிர்ப்பு வீங்கி - உள்ளே (வெறுப்பு) பெருகிப் பெரு மூச்சாய் வெளிப்பட்டு; ஊடல் உண்டாயிற்று- பிணக்கு ஏற்பட்டது. |
அன்று, ஏ - அசை. |
(15) |
10305. | ஆயது ஓர் அளவில், ஐயன், பரதனை, அருளின் |
| நோக்கி, |
| 'தூய வீடணற்கும், மற்றைச் சூரியன் மகற்கும், |
| தொல்லை |
| மேய வானரர்கள் ஆய வீரர்க்கும், பிறர்க்கும், நம்தம் |
| நாயகக் கோயில் உள்ள நலம் எலாம் தெரித்தி' |
| என்றான்.* |
|
ஆயது ஓர் அளவில்- அந்தப் பொழுதில்; ஐயன்- இராமபிரான்; பரதனை அருளின் நோக்கி - பரதனை அன்புறப் பார்த்து; 'தூய வீடணற்கும் - உளந்தூய வீடணனுக்கும்; மற்றை - மற்றும்; சூரியன் மகற்கும் - கதிரவன் மைந்தனான சுக்கிரீவனுக்கும்; தொல்லை மேய - பழமை வாய்ந்த; வானரர்கள் ஆய வீரர்க்கும் - வானர வீரர்களுக்கும்; பிறர்க்கும் - மற்றையோருக்கும்; நம்தம்- நம்முடைய; நாயகக் கோயில் உள்ள- முதன்மை வாய்ந்த அரண்மனையில் அமைந்துள்ள; நலம் எலாம் தெரித்தி- சிறப்புக்கள் எல்லாவற்றையும் விளக்குவாயாக; என்றான் - என்று கூறினான். |
(16) |
10306. | என்றலும், இறைஞ்சி, மற்றைத் துணைவர்கள் |
| யாவரோடும் |
| சென்றனன் எழுந்து, மாடம் பல ஒரீஇ, உலகில் |
| தெய்வப் |
| பொன் திணிந்து அமரரோடும் பூமகள் உறையும் |
| மேருக் |
| குன்று என விளங்கித் தோன்றும் நாயகக் கோயில் |
| புக்கான்.* |
|
என்றலும்- இவ்வாறு இராமன் கூறுதலும்;இறைஞ்சி - (பரதன்) வணங்கி; மற்றைத் துணைவர்கள் யாவரோடும்- பிற அன்பர்கள் அனைவரோடும்; எழுந்து சென்றனன்- எழுந்து |