பக்கம் எண் :

 படைக் காட்சிப் படலம்61

போயது, அந்தகன் புரம் புக நிறைந்தது போலாம், 

ஏயும் மும்மை நூல் மார்பினர் எய்த வில் இரண்டால். 

 

இலங்கையின் அளவில் தீயின் வெய்யபோர் அரக்கர் 
தம்  சேனை
-  இலங்கையின்   எல்லையில்   நெருப்பினும்
கொடியவர்களாய்ப் போராற்றும் அரக்கர் தம் சேனை; ஆயிரம் 
பெரு வெள்ளம் உண்டு அச்சேனை போயது
- ஆயிரம்
பெருவெள்ளம் உண்டு அச்சேனை அழிந்துபோயது; அந்தகன்
புரம்புக நிறைந்தது போலாம்
- எமபுரத்தில் அது நிறைந்தது
போலும்!   ஏயும்  மும்மை  நூல்  மார்பினர்  எய்தவில் 
இரண்டால்
- (இவ்வளவும் செய்தவை) முந்நூல் பொருந்திய 
மார்பினர் ஆகிய இராம இலக்குவர் எய்த வில் இரண்டே ஆம். 
 

(43)
 

9290.

'கொற்ற வெஞ் சிலைக் கும்பகன்னனும், நுங்கள் 

கோமான்

பெற்ற மைந்தரும், பிரகத்தன் முதலிய பிறரும், 

மற்றை வீரரும், இந்திரசித்தொடு மடிந்தார்; 

இற்றை நாள் வரை, யானும் மற்று இவனுமே  

இருந்தேம்.

 

கொற்றை வெஞ்சிலைக் கும்பகன்னனும்- வெற்றியே
பெறுதற்குரிய கொடிய வில்லையேந்திய கும்பகன்னனும்; நுங்கள்
கோமான் பெற்ற மைந்தரும்
- நும் அரசனாகிய இராவணன்
பெற்ற மைந்தரும்; பிரகத்தன் முதலிய பிறரும்- பிரகத்தன்
முதலிய பிறரும்; மற்றை வீரரும் இந்திரசித்தொடு மடிந்தார்
- மற்றைய வீரர்களும், இந்திரசித்தோடு மடிந்தார்கள்; இற்றை 
நாள் வரை யானும் மற்று இவனுமே இருந்தேம்
- இன்று
வரையில் யானும் இந்த இராவணனுமே மடியாதிருந்தோம். 
 

(44)
 

9291.

'மூலத் தானை என்று உண்டு; அது மும்மை நூறு 

அமைந்த

கூலச் சேனையின் வெள்ளம்; மற்று அதற்கு இன்று 

குறித்த

காலச் செய்கை நீர் வந்துளீர்; இனி, தக்க கழலோர் 

சீலச் செய்கையும், கலிப் பெருஞ் சேனையும், 

தெரிக்கில்.