பக்கம் எண் :

610யுத்த காண்டம் 

புறப்பட்டவனாகி; மாடம் பல ஒரீஇ- பல மாட கூடங்கள்
தாண்டி; உலகில்- அனைத்துலகங்களிலும்; பொன் திணிந்து-
(சிறந்த) பொன் செறிந்து;  அமரரோடும்  பூமகள் உறையும்-
தேவர்களோடு திருமகளும் உறைகின்ற; மேருக்குன்று என-
இமயமலை போன்று;விளங்கித் தோன்றும் - ஒளிபெற்றுத்
திகழும்; தெய்வ  நாயகக்   கோயில்    புக்கான்-
தெய்வத்தன்மை பொருந்திய தலைமை அரண்மனைக்குச்
சென்றான்.
 

(17)
 

10307.

வயிரம், மாணிக்கம், நீலம், மரகதம் முதலாய் உள்ள

செயிர் அறு மணிகள் ஈன்ற செழுஞ் சுடர்க் கற்றை

சுற்ற,

உயிர் துணுக்குற்று நெஞ்சும் உள்ளமும் ஊசலாட,  

மயர்வு அறு மனத்து வீரர், இமைப்பிலர், மயங்கி

நின்றார்.

 

மயர்வு அறு மனத்து வீரர் - கலக்கமற்ற மனம் படைத்த
வீடணன் முதலாம் வீரர்கள்;  வயிரம் மாணிக்கம் நீலம்
மரகதம் முதலாய் உள்ள - வைரம், மாணிக்கம், நீலம்,
மரகதம் தொடக்கமாய் உள்ள; செயிர் அறுமணிகள் ஈன்ற-
குற்றமற்ற மணிக்கற்கள் தந்த; செழுஞ்சுடர்க் கற்றை சுற்ற
- வளமான ஒளிக்கிரணங்கள் தம்மைச் சூழவும்;உயிர் - தமது
உயிர்; துணுக்குற்று - திடுக்கிட; நெஞ்சும் உள்ளமும் ஊசலாட
- மனமும் உணர்வும் தடுமாற; இமைப்பிலர் - இமைக்கவும்
மறைந்தவர்களாய் மயங்கி நின்றார்- மயக்கம் கொண்டு
நின்றார்கள்.
 

(18)
 

10308.

விண்டுவின் மார்பில் காந்தும் மணி என விளங்கும்

மாடம்

கண்டனர்; பரதன் தன்னை வினவினர், அவர்க்கு,

'காதல்

புண்டரீகத்துள் வைகும் புராதனன், கன்னல்

தோளான்,

கொண்ட நல் தவம்தன்னாலே உவந்து, முன்

கொடுத்தது' என்றான்.*

 

விண்டுவின் மார்பில் -   திருமாலின்    மார்பினில்;
காந்தும் மணி என- ஒளி விடும் கௌத்துவ மணி போன்று;
விளங்கும் மாடம்