பக்கம் எண் :

 திருமுடி சூட்டு படலம்611

கண்டனர்- திகழும் மாடத்தைக் கண்டவர்கள்; பரதன் தன்னை
வினவினர் - பரதனிடம் அது குறித்துக் கேட்டனர்; அவர்க்கு
- அவர்களிடம் (பரதன்); 'புண்டரீகத்துள் வைகும் புராதனன்
- உந்தித் தாமரையில்    வாழும்   பழம்     பெருமை   மிக்க
பிரமதேவன்; கன்னல் தோளான்- கரும்பு போல்      இனிமை
மிக்க தோள்களை உடைய இட்சுவாகு மன்னனுக்கு; கொண்ட நல்
தவத்தினாலே
-   (அவன்)    மேற்கொண்ட     அருந்தவத்தைப்
பாராட்டி; காதல் -   அன்புடன்;   உவந்து- மகிழ்ந்து; முன்
கொடுத்தது
- முன்னர் பரிசாகத் தந்ததாகும்;  என்றான்-
எனக் கூறினான்.
 

(19)
 

10309.

'பங்கயத்து ஒருவன் இக்குவாகுவிற்கு அளித்த

பான்மைத்து

இங்கு இது மலராள் வைகும் மாடம்' என்று இசைத்த

போதில்,

'எங்களால் துதிக்கலாகும் இயல்பதோ' என்று கூறி,

செங் கைகள் கூப்பி, வேறு ஓர் மண்டபம்அதனில்

சேர்ந்தார்.

 

பங்கயத்து ஒருவன்-     தாமரையில்   வைகும் ஒப்பற்ற
பிரமதேவன்; இக்குவாகுவிற்கு- இட்சுவாகு மன்னனுக்கு; அளித்த
பான்மைத்து- அளித்த சிறப்புக்குரிய; இங்கு இது மலராள்
வைகும் மாடம் - இங்கு   அமைந்துள்ள இந்த திருமகள் தங்கும்
இனிய மாடம்;என்று இசைத்த போதில்- என்று     பரதன்
இயம்பியபோது, (வீடணாதியர்);எங்களால்   துதிக்கலாகும்
இயல்பதோ
- எங்களால் புகழக் கூடி அளவினதோ இது?; என்று
கூறி
- என்று மொழிந்து; செங்கைகள் கூப்பி - தம் சிவந்த
கரங்களால் வணங்கி;வேறு ஓர் மண்டபம் அதனில்- மற்றொரு
மண்டபத்துக்கு; சேர்ந்தார்- சென்று சேர்ந்தனர்.
 

(20)
 

10310.

இருந்தனர், அனைய மாடத்து இயல்பு எலாம்

எண்ணி எண்ணி,

பரிந்தனன் இரவி மைந்தன், பரதனை வணங்கி

'தூயோய்!

கருந் தட முகிலினாற்குக் காப்பு நாண் அணியும்

நல் நாள்

தெரிந்திடாது இருத்தல் என்னோ?' என்றலும்,

அண்ணல் செப்பும்: