பக்கம் எண் :

612யுத்த காண்டம் 

அனைய மாடத்து இயல்பு எலாம்-   அந்த     மாடத்தின்
தன்மையை எல்லாம்; எண்ணி எண்ணி இருந்தனர்- (வீடணாதியர்)
நினைந்து   நினைந்து   வியந்திருந்தனர்;      இரவி மைந்தன் -
சூரியன் புதல்வனாகிய    சுக்கிரீவன்;      பரிந்தனன்- அன்பு
பூண்டவனாய்; பரதனை வணங்கி- பரதனைப் பணிந்து; 'தூயோய்!
- புனிதம் மிக்கவனே; கருந்தட   முகிலினாற்கு- `கரிய பெரிய
முகில் போலும் நிறம் படைத்த இராமபிரானுக்கு;    காப்பு நாண்
- (மங்கல மகுடம் புனைதற்கு) காப்பு   நாணினை;   அணியும்
நல்நாள்
- அணிந்து கொள்ளும் இனிய   நாள்;   தெரிந்திடாது
இருத்தல் என்னோ
- இன்னமும் நாங்கள்     அறியமுடியாமல்
இருப்பது ஏன்; என்றலும்- எனக்  கேட்டலும்;     அண்ணல்
செப்பும்
- பரதன் கூறுவானாயினன்.
 

(21)
 

10311.

'ஏழ் கடல் அதனில் தோயம், இரு நதி பிறவில்

தோயம்

தாழ்வு இலாது இவண் வந்து எய்தற்கு அருமைத்து

ஓர் தன்மைத்து என்ன,

ஆழி ஒன்று உடையோன் மைந்தன், அனுமனைக்

கடிதின் நோக்க,

சூழ் புவி அதனை எல்லாம் கடந்தனன், காலின்

தோன்றல்.

 

ஏழ்கடலதனில் தோயம்- ஏழு கடல்களிலிருந்து கொண்டு
வரும் புனித நீரும்; பிற இருநதியில் தோயம்- வேறுள்ள பெரிய
நதிகளிலிருந்து    கொண்டுவரும் தீர்த்தங்களும்; தாழ்விலாது-
தாமதமின்றி;இவண் வந்து எய்தற்கு - இங்கு வந்து சேருதற்கு;
அருமைத்து ஓர் தன்மைத்து- அரிய  தன்மையுடையது;என்ன -
என்று (பரதன்) கூற;   ஆழி ஒன்று உடையோன் மைந்தன் -
ஒற்றைச் சக்கரத் தேரினனான சூரியன்     புதல்வன் (சுக்கிரீவன்);
அனுமனைக் கடிதின் நோக்க
- அனுமனை விரைந்து பார்க்கவும்;
காலின் தோன்றல்
- காற்றின் மைந்தனாகிய அனுமன்; சூழ் புவி
அதனை எல்லாம்
- கடல் சூழ் உலகத்தின் (தொலைவை)
எல்லாம்; கடந்தனன்- உடன் கடந்து சென்றான்.
 

(22)
 

10312.

'கோமுனியோடு மற்றைக் கணிதரைக் கொணர்க!'

என்னா

ஏவினன்; தேர் வலான் சென்று இசைத்தலும், உலகம்

ஈன்ற