| பூமகன் தந்த அந்தப் புனித மா தவன் வந்து எய்த, |
| யாவரும் எழுந்து போற்றி, இணை அடி தொழுது |
| நின்றார். |
|
கோமுனியோடு- தலைமை வாய்ந்த வசிட்ட முனிவரோடு; மற்றை - பிற; கணிதரைக் கொணர்க - சோதிடரையும் அழைத்து வருக; என்னா - என்று; ஏவினன் - (பரதன்) அமைச்சருக்குக் கட்டளையிட்டான்; தேர் வலான் - தேர் செலுத்துவதில் வல்ல (அமைச்சன்) சுமந்திரனும்; சென்று இசைத்தலும் - சென்று முனிவரிடம் கூறியதும்; உலகம் ஈன்ற பூமகன் - உலகைப் படைத்த பிரம தேவன்; தந்த அந்தப் புனித மாதவன் - பெற்ற அப்புனித மாமுனி (வசிட்டனும்); வந்து எய்த - வந்து சேர்தலும்; யாவரும் எழுந்து போற்றி- அனைவரும் எழுந்து துதித்து; இணைஅடி தொழுது நின்றார்- அடியிணை வணங்கி நின்றனர். |
(23) |
10313. | அரியணை பரதன் ஈய, அதன்கண் ஆண்டு இருந்த |
| அந்தப் |
| பெரியவன், அவனை நோக்கி, 'பெரு நிலக் |
| கிழத்தியோடும் |
| உரிய மா மலராளோடும் உகந்தனர் ஒருவு இல் |
| செல்வம் |
| கரியவன் உய்த்தற்கு ஒத்த காப்பு நாள் நாளை' |
| என்றான். |
|
அரியணை ஈய - சிங்காதனம் இடவும்; அதன் கண் ஆண்டு இருந்த- அதன் மீது அங்கே அமர்ந்த; அந்தப் பெரியவன்- அந்தப் பெருந்தகை; அவனை நோக்கி- பரதனைப் பார்த்து; 'பெருநிலக் கிழத்தியோடும் - பூமிப் பிராட்டியோடும்; உரிய மாமலராளோடும் - பொருந்திய திருமகளோடும்; உகந்தனர்- உவந்திருந்து;ஒருவு இல் செல்வம்- அழியாப் பெருஞ்செல்வம் (நுகர்ந்து); கரியவன்- கரு நிறத்து இராமன்; உய்த்தற்கு - ஆட்சி நடத்துதற்கு; ஒத்த காப்பு நாள்- இசைந்த காப்பு அணியும் நன்னாள்; நாளை- நாளைய தினமாகும் ; என்றான் -. |
(24) |
10314. | இந்திர குருவும் அன்னார் எனையவர் என்ன நின்ற |
| மந்திர விதியினாரும், வசிட்டனும், வரைந்து |
| விட்டார்- |