பக்கம் எண் :

 திருமுடி சூட்டு படலம்615

எவ்வம் இல் ஆற்றல் வீரர் யாவரும், எழுந்து சென்று,

ஆங்கு

அவ்வியம் அவித்த சிந்தை அண்ணலைத் தொழுது

சொன்னார்.*

 

அவ்வயின்- அப்பொழுது; முனிவனோடும்- வசிட்ட
முனிவனோடு;    அரியின் சேயும்-   சூரியன் புதல்வன்
சுக்கிரீவனும்;   செல்வியின் நிருதர் கோனும்- செம்மை
மிக்க அரக்கர் தலைவன்     வீடணனும்;   சாம்பனும் -
சாம்பவந்தனும்;   வாலிசேயும் - வாலியின் புதல்வன்
அங்கதனும்; எவ்வம் இல் ஆற்றல் வீரர்- குற்றமற்ற
வல்லமைமிக்க வீரர்கள்; யாவரும் - அனைவரும்; ஆங்கு-
அவ்விடத்தில்; அவ்வியம் அவித்த சிந்தை - பொறாமை
அகற்றிய உள்ளம் படைத்த; அண்ணலை - இராமபிரானை;
தொழுதுசொன்னார் - வணங்கி (முடிசூட்டு நாள் குறித்துக்)
கூறினர்.
 

(27)
 

10317.

'நாளை நீ மவுலி சூட நன்மை சால் பெருமை

நல்நாள்;

காளை! நீ அதனுக்கு ஏற்ற கடன்மைமீது இயற்றுக!'

என்று,

வேளையே பொடியதாக விழிக்கும் நீள் நுதலின்

வெண் பூம்

பூளையே சூடுவானைப் பொருவும் மா முனிவன்

போனான்.*

 

(வசிட்டன் இராமனிடம்) நீ மவுலி சூட- நீ மகுடன் சூட;
நன்மை சால் பெருமை நல்நாள் நாளை- நலம் தரும் பெருமை
சான்ற சிறந்த நாள்  நாளை;   காளை-   (ஆதலால்) காளை
போன்றவனே; நீ அதனுக்கு ஏற்ற- நீ     அப்பொறுப்புக்கு
ஏற்றவாறு; கடன்மை மீது இயற்றுக- கடமைகளின் மேல் கவனம்
செய்க; என்று- என்று கூறி; வேளையே பொடியதாக விழிக்கும்
- மன்மதனையே சாம்பலாக்கக் கண் காட்டும்; நீள் நுதலின்
- நீண்ட நெற்றியை உடைய;      வெண்பூம்     பாளையே-
வெண்ணிறத்துப் பூளைப் பூவையே; சூடுவானை- சூடுகின்ற சிவ
பெருமானை; பொருவும்- நிகர்த்த; மாமுனிவன்- பெருமுனி
வசிட்டன்; போனான் - சென்றான்.
 

(28)