10318. | நான்முகத்து ஒருவன் ஏவ, நயன் அறி மயன் என்று |
| ஓதும் |
| நூல் முகத்து ஓங்கு கேள்வி நுணங்கியோன், |
| வணங்கு நெஞ்சன், |
| கோல் முகத்து அளந்து, குற்றம் செற்று, உலகு |
| எல்லாம் கொள்ளும் |
| மான் முகத்து ஒருவன், நல் நாள் மண்டபம் |
| வயங்கக் கண்டான். |
|
நான்முகத்து ஒருவன் ஏவ - பிரமனாகிய ஒப்பற்றவன் கட்டளையிட; நயன் அறிமயன் என்று ஓதும்- கலைநுட்பம் வல்ல (தெய்வ தச்சன்) மயன் என்று அறியப்படும்;நூல் முகத்து ஓங்கு கேள்வி - சிற்ப நூலில் சிறந்த கேள்வியுடனே; நுணங்கியோன்- நுண்மாண் நுழைபுலம் மிக்கவனாகிய; மான் முகத்து ஒருவன்- மான்முகம் பெற்ற ஒப்பற்றவன்; வணங்கும் நெஞ்சன்- வணங்கி நிற்கும் உள்ளம் படைத்தவன்; கோல் முகத்து அளந்து- கோல்முகம் கொண்டு அளந்து; குற்றம் செற்று - குற்றம் களைந்து; உலகு எல்லாம் கொள்ளும்- உலகையே தனக்குள் அடக்கும்; மண்டபம்- மண்டபத்தை; நல்நாள்- மங்கள நாளில்; வயங்கக் கண்டான் - விளக்கமுறக் கட்டி முடித்தான். |
(29) |
இராமன் புனித நீராட்டு |
10319. | 'சூழ் கடல் நான்கின் தோயம், எழு வகை ஆகச் |
| சொன்ன |
| ஆழ் திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று' |
| என்ன, 'ஆம்' என்று, |
| ஊழியின் இறுதி செல்லும் தாதையின் உலாவி, |
| ஒன்றா |
| ஏழ் கடல் நீரும் தந்தான், இருந்து உய்ய மருந்து |
| தந்தான். |
|
சூழ் - உலகைச் சூழ்ந்துள்ள;கடல் நான்கின் தோயம் - நான்கு கடல்களின் நீரும்; எழுவகை ஆகச் சொன்ன- எழு வகையாகக் கூறப்பட்ட; ஆழ் திரை - ஆழ்ந்த அலை கொண்ட கடல் நீரும்; ஆற்றின் நீரோடு - ஆறுகளின் நீரோடு; அமைத்தி- கொண்டு வந்து சேர்க்க; என்ன- என்று (சுக்கிரீவன்) ஆணையிட; |