பக்கம் எண் :

 திருமுடி சூட்டு படலம்617

இருந்து உய்ய மருந்து தந்தான் - நெடிது வாழச் சஞ்சீவி மலை
மருந்து தந்தவனாகிய அனுமனும்; ஆம் என- அப்படியே செய்வேன்
என்று; ஊழியின் இறுதி செல்லும்-    யுக முடிவில்     எழுகின்ற;
தாதையின் உலாவி - சண்ட     மாருதம் போல்  எழுந்து சென்று;
ஒன்றா - ஒரே    சமயத்தில்;        ஏழ்கடல் நீரும் தந்தான் -
எழுகடல் நீரையும் கொணர்ந்து தந்தான்.
 

(30)
 

10320.

எரி மணிக் குடங்கள் பல் நூற்று யானைமேல்

வரிசைக்கு ஆன்ற

விரி மதிக் குடையின் நீழல், வேந்தர்கள் பலரும்

ஏந்தி,

புரை மணிக் காளம் ஆர்ப்ப, பல்லியம் துவைப்ப,

பொங்கும்

சரயுவின் புனலும் தந்தார், சங்குஇனம் முரல

மன்னோ.*

 

வேந்தர்கள் பலரும்- பல நாட்டு மன்னர்களும்;வரிசைக்கு
ஆன்ற - தம் தகுதிக்கு ஏற்ப;  விரிமதிக் குடையின் நீழல் -
விரிந்த நிலவு போன்ற வெண்கொற்றக் குடை     நிழலில்; பல்
நூற்று எரிமணிக் குடங்கள்
- பல நூறு சுடர் மிக்க இரத்தினக்
குடங்களை; யானை மேல் ஏந்தி - யானை மீதமர்ந்து ஏந்தி;
புரை- உள்துளை கொண்ட;மணிக்காளம் ஆர்ப்ப- அழகிய
எக்காளம்      ஒலிக்க;    பல்லியம்   துவைப்ப- பல
இசைக்கருவிகளும் முழங்க;சங்கு இனம் முரல பொங்கும்-
சங்குகள் ஒலிக்க அலைகள் எழும்; சரயுவின் புனலும் தந்தார்
- சரயு நீதி நீரும் கொண்டு வந்தனர்.
 

மின் - அசை.
 

(91)
 

10321.

மாணிக்கப் பலகை தைத்து, வயிரத் திண் கால்கள்

சேர்த்தி,

ஆணிப்பொன் சுற்றி முற்றி, அழகுறச் சமைத்த பீடம்,

ஏண் உற்ற பளிக்கு மாடத்து இட்டனர்; அதனின்மீது

பூண் உற்ற திரள் தோள் வீரன் திருவொடும்

பொலிந்தான் மன்னோ.*

 

மாணிக்கப் பலகை தைத்து- மாணிக்கத்தால் செய்த பலகை
பொருத்தப் பெற்று; வயிரத்தின் கால்கள் சேர்த்தி - வைரத்தால்