வலிய கால்கள் செய்தமைத்து; ஆணிப்பொன் சுற்றிமுற்றி- உயர்ந்த பொன்னால் சுற்றும் பூர்த்தி செய்யப் பட்டு; அழகுறச் சமைத்த பீடம் - எழிலாக உருவாக்கிய பீடத்தை; ஏண் உற்ற- பெருமை சான்ற; பளிக்கு மாடத்து- பளிங்கு மாடத்தில்; இட்டனர்- அமைத்தனர்; அதனின் மீது - அப்பீடத்தின் மேல்;பூண் உற்ற- அணிகலன் அணிந்த; திரள் தோள் வீரன்- திரண்ட தோள்களை உடைய வீரனாகிய இராமபிரான்; திருவொடும் பொலிந்தான் - சீதா பிராட்டியோடும் அழகுற வீற்றிருந்தான். மன் - அசை. |
(32) |
10322. | மங்கல கீதம் பாட, மறை ஒலி முழங்க, வல் வாய்ச் |
| சங்குஇனம் குமுற, பாண்டில் தண்ணுமை ஒலிப்ப, |
| தா இல் |
| பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப, பூ மழை பொழிய, |
| விண்ணோர் |
| எங்கள் நாயகனை வெவ்வேறு எதிர்ந்து, அபிடேகம் |
| செய்தார்.* |
|
மங்கல கீதம் பாட- மங்கலப் பாடல்கள் ஒலிக்கவும்; மறை ஒலி முழங்க- வேத முழக்கம் கேட்கவும்; வல் வாய்ச் சங்கு இனம் குமுற- பெரிய வாயை உடைய சங்குகள் ஒலிக்கவும்; பாண்டில் தண்ணுமை ஒலிப்ப- தாளமும் மத்தளமும் ஓசை செய்யவும்; தா இல் பல்லியம் பொங்கி ஆர்ப்ப - குற்றம் தீர்ந்த பல்வகை இசைக் கருவிகள் மேலெழுந்து ஆரவாரிக்கவும்; பூ மழை பொழிய - பூ மாரி பெய்யவும்; விண்ணோர் - வானோர்; எங்கள் நாயகனை - எங்கள் தலைவனாகிய இராமபிரானை; வெவ்வேறு - தனித்தனியாக; எதிர்ந்து அபிடேகம் செய்தார்- அயோத்தியில் வரவேற்று தீர்த்தமாட்டினர். |
(23) |
10323. | மா தவர், மறைவலாளர், மந்திரக் கிழவர், மற்றும் |
| மூதறிவாளர், உள்ள சான்றவர் முதல் நீராட்ட, |
| சோதியான் மகனும், மற்றைத் துணைவரும், |
| அனுமன்தானும், |
| தீது இலா இலங்கை வேந்தும், பின் அபிடேகம் |
| செய்தார். |
|
மாதவர் - முனிவர்களும்; மறைவலாளர்- அந்தணர்களும்; மந்திரக் கிழவர் - அமைச்சர்களும்; மற்றும் - மேலுமுள்ள; |