பக்கம் எண் :

618யுத்த காண்டம் 

வலிய கால்கள் செய்தமைத்து; ஆணிப்பொன் சுற்றிமுற்றி-
உயர்ந்த பொன்னால்    சுற்றும் பூர்த்தி செய்யப்   பட்டு;
அழகுறச் சமைத்த பீடம் - எழிலாக உருவாக்கிய பீடத்தை;
ஏண் உற்ற- பெருமை சான்ற; பளிக்கு மாடத்து- பளிங்கு
மாடத்தில்; இட்டனர்-    அமைத்தனர்;   அதனின் மீது -
அப்பீடத்தின் மேல்;பூண் உற்ற-   அணிகலன் அணிந்த;
திரள் தோள் வீரன்- திரண்ட     தோள்களை  உடைய
வீரனாகிய இராமபிரான்; திருவொடும் பொலிந்தான் - சீதா
பிராட்டியோடும் அழகுற வீற்றிருந்தான். மன் -
அசை.
 

(32)
 

10322.

மங்கல கீதம் பாட, மறை ஒலி முழங்க, வல் வாய்ச்

சங்குஇனம் குமுற, பாண்டில் தண்ணுமை ஒலிப்ப,

தா இல்

பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப, பூ மழை பொழிய,

விண்ணோர்

எங்கள் நாயகனை வெவ்வேறு எதிர்ந்து, அபிடேகம்

செய்தார்.*

 

மங்கல கீதம் பாட- மங்கலப் பாடல்கள் ஒலிக்கவும்;
மறை ஒலி முழங்க- வேத முழக்கம் கேட்கவும்; வல் வாய்ச்
சங்கு இனம் குமுற
- பெரிய      வாயை உடைய சங்குகள்
ஒலிக்கவும்; பாண்டில் தண்ணுமை ஒலிப்ப- தாளமும் மத்தளமும்
ஓசை செய்யவும்; தா இல் பல்லியம் பொங்கி ஆர்ப்ப -
குற்றம் தீர்ந்த   பல்வகை    இசைக்     கருவிகள் மேலெழுந்து
ஆரவாரிக்கவும்; பூ மழை  பொழிய - பூ மாரி பெய்யவும்;
விண்ணோர் - வானோர்;   எங்கள்   நாயகனை - எங்கள்
தலைவனாகிய இராமபிரானை; வெவ்வேறு - தனித்தனியாக;
எதிர்ந்து அபிடேகம் செய்தார்- அயோத்தியில் வரவேற்று
தீர்த்தமாட்டினர்.
 

(23)
 

10323.

மா தவர், மறைவலாளர், மந்திரக் கிழவர், மற்றும்

மூதறிவாளர், உள்ள சான்றவர் முதல் நீராட்ட,

சோதியான் மகனும், மற்றைத் துணைவரும்,

அனுமன்தானும்,

தீது இலா இலங்கை வேந்தும், பின் அபிடேகம்

செய்தார்.

  

மாதவர் - முனிவர்களும்; மறைவலாளர்- அந்தணர்களும்;
மந்திரக் கிழவர் - அமைச்சர்களும்; மற்றும் - மேலுமுள்ள;