மூதறிவாளர் - பேரறிஞர்களும்; உள்ள சான்றவர் - அங்கிருந்த சான்றோர்களும்; முதல் நீராட்ட - முதலில் அபிடேகம் செய்தபின்; சோதியான் மகனும் - சூரியன் மகனாகிய சுக்கிரீவனும்; மற்றைத் துணைவரும் - பிற நண்பர்களும்; அனுமன் தானும்- அனுமனும்; தீது இலா இலங்கை வேந்தும் - களங்கமற்ற வீடணனும்; பின் அபிடேகம் செய்தார்- தொடர்ந்து அபிடேகம் செய்தனர். |
(34) |
10324. | 'அம் கண் வான், உலகம், தாய அடி, மலர்த் |
| தவிசோன் ஆட்டும் |
| கங்கை வார் சடையின் ஏற்றான், கண்ணுதல் |
| ஒருவன்; இந் நாள் |
| சிங்கஏறு அனையான் செய்ய திருமுடி ஆட்டும் நல் |
| நீர் |
| எங்கண் ஏற்று அன்னோன் வாழும்?' என்றனர், |
| புலவர் எல்லாம்.* |
|
'அம் கண் வான் - அழகிய வானகத்தையும்;உலகம்- மண்ணகத்தையும்; தாய அடி- அளந்த (திருமால்) திருவடிகளை; மலர்த் தவிசோன்- உந்தித் தாமரை வாழும் பிரமதேவன்; ஆட்டும் கங்கை - நீராட்டிய கங்கா தீர்த்தத்தை; கண்ணுதல் ஒருவன் - நெற்றிக் கண் கொண்ட ஒப்பற்ற சிவபெருமான்; வார் சடையின் ஏற்றான் - விரிந்த சடையில் ஏற்றுக் கொண்டான்; இந்நாள் - இன்று; சிங்க ஏறு ஆனையான் - ஆண் சிங்கம் போன்ற இராமனின்; செய்ய திருமுடி- செப்பமான திருமுடியில்; ஆட்டும் நல் நீர் - அபிடேகமான புனித நீரை; எங்கண் ஏற்று- எவ்விடம் ஏற்று; அன்னோன் வாழும் - அச்சிவபெருமான் வாழ்வான்; என்றனர்- என்று கூறி வியந்தனர்; புலவர் எல்லாம் - அறிஞர்கள் ஆனோர் எல்லாரும். |
(35) |
10325. | மரகதச் சயிலம் செந் தாமரை மலர்க் காடு பூத்து, |
| திரை கெழு கங்கை வீசும் திவலையால் நனைந்து, |
| செய்ய |
| இரு குழை தொடரும் வேற் கண் மயிலொடும் |
| இருந்தது ஏய்ப்ப, |
| பெருகிய செவ்வி கண்டார், பிறப்பு எனும் பிணிகள் |
| தீர்ந்தார். |