பக்கம் எண் :

62யுத்த காண்டம் 

மூலத்தானை என்று உண்டு- மூலபலப்படை என்ற ஒன்று 
உண்டு;   அது  மும்மை  நூறு அமைந்த  கூலச்சேனையின் 
வெள்ளம்
- அது மூன்று நூறாக அமைந்த திரண்ட சேனையாகிய 
வெள்ளம்; மற்று அதற்கு இன்று குறித்த காலச்செய்கை நீர் 
வந்துளீர்
- அப்படைக்கு இன்று போர் செய்யுமாறு குறிக்கப்பெற்ற 
காலத்தின் செயலால் (அதற்கு உதவியாக) நீவிர் வந்திருக்கின்றீர்கள்; 
இனி, தக்க கழலோர் சீலச் செய்கையும்
- இனித்தகுதி அமைந்த 
கழல் களை அணிந்த  வானரப்  படைத்தலைவரின் ஒழுங்கமைந்த 
செய்கையையும்; கவிப்பெருஞ்சேனையும் தெரிக்கில்- மிகுந்த
குரங்குப்படையின் தன்மையையும் கூற வேண்டின்.
 

முந்நூறு வெள்ளம் மூலத்தானை போர் செய்ய வேண்டிய நாள்
இன்று ஆதலின் அத்தானைக்குத் துணையாக நீவிர் வந்துளீர்
என்றவாறு. மும்மை நூறு - முந்நூறு கூலம் - திரட்சி. தக்க கழலோர் 
- வானரப் படைத்தலைவர். சீலம் - ஒழுங்கு. கவி - குரங்கு. 
 

(45)
 

9292.

'ஒரு குரங்கு வந்து இலங்கையை மலங்கு எரியூட்டி, 

திருகு வெஞ் சினத்து அக்கனை நிலத்தொடும் 

தேய்த்து,

பொருது, தூது உரைத்து, ஏகியது, - அரக்கியர் புலம்ப, 

கருது சேனையாம் கடலையும் கடலையும் கடந்து. 

 

ஒரு குரங்கு வந்து இலங்கையை மலங்கு எரியூட்டி- ஒரு 
குரங்கு வந்து இலங்கையைக் கலங்குதற்குக் காரணமான தீயை மூட்டி;
திருகு வெஞ்சினத்து   அக்கனை   நிலத்தொடும் தேய்த்து-
மாறுபட்ட சினத்தினை உடைய  அக்க   குமாரனையும் நிலத்தோடு
தேய்த்துக் கொன்று; பொருது, தூதுரைத்து அரக்கியர் புலம்ப -
போர்   செய்து,   தூது   சொல்லி அரக்கியர் புலம்புமாறு; கருது
சேனையாம்   கடலையும்   கடலையும்   கடந்து   ஏகியது
-
மதிக்கத்தக்க,   சேனையாகிய   கடலையும்,  பெரிய   கடலையும்
கடந்து சென்றது.
 

ஒரு குரங்கு - அனுமன். மலங்கு எரி - கலங்குதற்குக்
காரணமாகிய தீ, அக்கன் - அக்ககுமாரன், இராவணன் மகன்.
குரங்குதானே என எள்ளிய படைத்தலைவர்க்கு அதன் வலிமை
கூறினான். 
 

(46)
 

9293.

'கண்டிலீர்கொலாம், கடலினை மலை கொண்டு கட்டி, 

மண்டு போர் செய, வானரர் இயற்றிய மார்க்கம்?