பக்கம் எண் :

620யுத்த காண்டம் 

மரகதச் சயிலம்- மரகத மலை;செந்தாமரை மலர்க்காடு
பூத்து
- செந்தாமரை   மலர்த்    தொகுதி    மலரப் பெற்று;
திரைகெழு கங்கை -   அலைகள்    செறிந்த கங்கை நதியின்;
வீசும் திவலையால் நனைந்து- வீசுகின்ற துளிகளால் ஈரமுற்று;
செய்ய-    சிவந்த; இருகுழை தொடரும் -    இரு செவிக்
குழைகளையும் தொட்டு   மீளும்; வேற்கண்- வேல் விழி
கொண்ட; மயிலொடும் இருந்தது எய்ப்ப- ஒரு மயிலோடு
விளங்கியது போன்று; பெருகிய செல்வி கண்டார் - விரியும்
அழகினைக் கண்டவர்கள்; பிறப்பு எனும் பிணிகள் தீர்ந்தார்
- பிறப்பு என்ற நோய் தீரப் பெற்றவர்கள் ஆயினர்.
 

(36)
 

10326.

தெய்வ நீராடற்கு ஒத்த செய் வினை வசிட்டன்

செய்ய,

ஐயம் இல் சிந்தையான் அச் சுமந்திரன்

அமைச்சரோடும்

நொய்தினின் இயற்ற, நோன்பின் மாதவர் நுனித்துக்

காட்ட,

எய்தின இயன்ற பல் வேறு, இந்திரற்கு இயன்ற

என்ன.

 

தெய்வ நீர்  ஆடற்கு    ஏற்ற-    புனித தீர்த்தங்கள்
அபிடேகம்   செய்தற்குப்    பொருத்தமான;    செய்வினை-
சடங்குகளை; வசிட்டன் செய்ய- வசிட்ட முனிவன் இயற்றுமாறு;
நோன்பின் மாதவர் - விரத வேதியர்கள்; நுனித்துக் காட்ட
- நுட்பங்களைச்  சுட்டிக்    காட்ட; ஐயமில் சிந்தையான்-
தெளிவு மிக்க சிந்தனையாளனாகிய; அச்சுமந்திரன்- அந்தச்
சுமந்திரன்; அமைச்சரோடும் - அமைச்சர் பெருமக்களோடு;
நொய்தினின் இயற்ற- விரைந்து பணி செய்ய; இந்திரற்கு
இயன்ற என்ன
- இந்திரனுக்கு அமைவது போன்று; பல்வேறு
இயன்ற எய்தின
- பல்வகைப் பொருள்களும் வந்து சேர்ந்தன.
 

(37)
 

வசிட்டன் இராமனுக்கு முடி புனைதல்
 

10327.

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடை வாள்

ஏந்த,

பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,