மானால் இவ்விருவரையும் ஆண்டுக் காணமுடியாதன்றோ என்பதனை நினையுங்கால் இப்பாடலின் சிறப்பும் வரிசைமுறையும் அழகும் புலனாகும் என்பது. இராமபிரானது வனவாசமாகிய முதலுக்குக் கிடைத்த வட்டி அனுமனும் அங்கதனும் என்பர் வாகீசகலாநிதி கி.வா. ஜகந்நாதன் அவர்கள். |
(38) |
10328. | வெள்ளியும் பொன்னும் ஒப்பார் விதி முறை மெய்யின் |
| கொண்ட |
| ஒள்ளிய நாளின், நல்ல ஓரையின், உலகம் மூன்றும் |
| துள்ளின குனிப்ப, மோலி சூடினன் - கடலின் வந்த |
| தெள்ளிய திருவும், தெய்வப் பூமியும், சேரும் |
| தோளான். |
|
கடலின் வந்த- திருப்பாற் கடலில் தோன்றிய; தெள்ளிய திருவும்- தெளிந்த அழகுடைய இலக்குமியும்; தெய்வப் பூமியும் - தெய்வத் தன்மை மிக்க பூமிப் பிராட்டியும்; சேரும் - அணைகின்ற; தோளான் - தோளை உடையவனாகிய இராமபிரான்; கொண்ட ஒள்ளிய நாளின்- தேர்ந்தெடுத்த சிறந்த நன்னாளில்;நல்ல ஓரையின் - சிறந்த நல் வேளையில்; உலகம் மூன்றும் துள்ளின குனிப்ப - மூன்று உலகமும் மகிழ்ச்சி நிரம்பியவாறு வணங்க; வெள்ளியும் பொன்னும் ஒப்பார் - அசுர குரு சுக்கிரனும், தேவ குரு வியாழனும் போன்ற நல்லோர்; விதி முறை- விதித்த முறைப்படியே;மௌலி- மகுடத்தை; மெய்யின் சூடினன் - தலையில் சூடிக் கொண்டான். |
(39) |
10329. | சித்தம் ஒத்துளன் என்று ஓதும் திரு நகர்த் தெய்வ |
| நன்னூல் |
| வித்தகன் ஒருவன் சென்னி மிலைச்சியதுஎனினும், |
| மேன்மை |
| ஒத்த மூஉலகத்தோர்க்கும் உவகையின் உறுதி |
| உன்னின், |
| தம்தம் உச்சியின்மேல் வைத்தது ஒத்தது, அத் தாம |
| மோலி. |
|
திரு நகர்த் தெய்வ நன்னூல் - அத்திரு நகர்க் கண் உள்ள தெய்வச் சிறப்பு வாய்ந்த நூல்களில்; வித்தகன்- வல்லவனும்; |