சித்தம் ஒத்துளன் - மனத்துக்கு இசைந்தவனும்; என்று ஓதும் ஒருவன் - என்று பேசப்படும் ஒப்பற்ற வசிட்ட மாமுனிவன்; சென்னி மிலைச்சியது எனினும் - இராமபிரான் தலையில் சூட்டியது என்றாலும்; அத் தாம மோலி- அவ்வொளி மிகுந்த மகுடம்; மேன்மை ஒத்த - மேன்மை பொருந்திய; மூ உலகத்தோர்க்கும் - மூன்று உலகிலுள்ளோருக்கும்; உவகையின் உறுதி உன்னின் - (அப்போது ஏற்பட்ட) மகிழ்ச்சியின் அளவை எண்ணினால்; தம்தம் உச்சியின் மேல் - தம் சொந்தத் தலையின் மீது; வைத்தது ஒத்தது - வைத்தாற் போல் அமைந்திருந்தது. |
(40) |
10330. | பல் நெடுங் காலம் நோற்று, தன்னுடைப் பண்பிற்கு |
| ஏற்ற |
| பின் நெடுங் கணவன்தன்னைப் பெற்று, இடைப் |
| பிரிந்து, முற்றும் |
| தன் நெடும் பீழை நீங்கத் தழுவினாள், தளிர்க் கை |
| நீட்டி, |
| நல் நெடும் பூமி என்னும் நங்கை, தன் கொங்கை |
| ஆர. |
|
பல் நெடுங்காலம் நோற்று- பல்லாண்டுகள் நீண்ட காலம் நோன்பிருந்து; தன்னுடைய பண்பிற்கு ஏற்ற - தன்னுடைய தகுதிக்கு ஏற்றவாறு;நெடுங் கணவன் பெற்று- உயர்ந்த கணவனை அடைந்து; இடை பிரிந்து- சிறிது காலம் அவனைப் பிரிந்திருந்து; தன் நெடும் பீழை முற்றும் நீங்க- தன் பெருந்துன்பம் முழுவதும் நீங்கிவிட; நன்னெடும் பூமி என்னும் நங்கை- சிறந்த பெரிய பூமி என்னும் மாது; தளிர்க் கை நீட்டி - தளிர்க் கரம் நீட்டி; தன் கொங்கை ஆர- தன் மார்பு குளிர; தழுவினாள் - தழுவி இன்புற்றாள். |
(41) |
பரதனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டுதல் |
10331. | விரத நூல் முனிவன் சொன்ன விதி நெறி வழாமை |
| நோக்கி, |
| வரதனும், இளைஞற்கு ஆங்கண் மா மணி மகுடம் |
| சூட்டி, |