பக்கம் எண் :

624யுத்த காண்டம் 

     

பரதனைத் தனது செங்கோல் நடாவுறப் பணித்து,

நாளும்

கரை தெரிவு இலாத போகக் களிப்பினுள்

இருந்தான் மன்னோ.

 

விரத நூல் முனிவன்- விரதம் வழுவாத வேதம் வல்ல வசிட்ட
முனிவன்;சொன்ன- சொல்லிய;  விதிநெறி -   விதி முறைகள்;
வழாமை நோக்கி -தவறாது காத்து;வரதனும் - அருளாளனாகிய
இராமபிரானும்; இளைஞர்க்கு- தன் தம்பிமார்    மூவர்க்கும்;
மாமணி மகுடம் சூட்டி- மாணிக்கம் இழைத்த உயர்ந்த மகுடம்
அணிவித்து; பரதனை - பரத நம்பியை; தனது     செங்கோல்
நடாவுறப் பணித்து
- தன்     செங்கோலாட்சி   நடத்துமாறு
கட்டளையிட்டு; நாளும் - நாள்தோறும்; கரை தெரிவிலாத
போகக் களிப்பினுள் இருந்தான்
-   எல்லையற்ற      இன்ப
மகிழ்ச்சியில் திளைத்திருந்தான்.
 

மாபெரும் சோதனைகள் தாண்டி உலகத்து உயிர்களெல்லாம்
 உவகை பூக்க இராமபிரான் சீதா பிராட்டியோடும் மணி மகுடம்
சூடினான். பின்னர் ஒரு முன்னுதாரணம்        காட்டுவானாய்த்
தம்பியர்க்கும் பொறுப்புகளைப்   பகிர்ந்தளித்தான்.    பரத
நம்பிக்கு        ஆட்சிப்    பங்களித்தான்.    மெய்யாகவே
இராமராச்சியம் என்பது பகிர்ந்தாளும் பண்பாடு உடையது என்று
மெய்ப்பித்தான் இராமபிரான்.
 

(42)