பூமகட்கு அணி அது என்ன- நிலமகளுக்கு இது ஓர் அணிகலன் என்று சொல்லும்படியாக;பொலி பசும் பூரி சேர்த்தி மாமணித் தூணின் செய்த மண்டபம் அதனின் நாப்பண்- விளங்கும் பசிய பொன்னைக் கொண்டு சிறந்த மணிக்கற்களால் ஆகிய தூண்களை அமைத்துச் செய்த திருவோலக்க மண்டபத்தின் நடுவில்; கோமணிச் சிவிகை மீதே- சிறந்த மணிகள் அழுத்திச் செய்த பல்லக்கின் மேல்; கொண்டலும் மின்னும் போல- மேகமும் மின்னலும் போல; தயரதராமன்- தசரத சக்கரவர்த்தியின் புதல்வனான ஸ்ரீராமன்; தாமரைக் கிழத்தியோடும்- தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளாகிய சீதாபிராட்டியோடும்; சார்ந்தான்- வந்து சேர்ந்தான். |
பல்லக்கில் ஏறி அத்தாணி மண்டபத்துக்கு வந்து சேர்ந்தான். பூரி - பொன். |
(1) |
10333. | விரி கடல் நடுவண் பூத்த மின் என ஆரம் வீங்க, |
| எரி கதிர்க் கடவுள்தன்னை இனமணி மகுடன் ஏய்ப்ப, |
| கரு முகிற்கு அரசு செந்தாமரை மலர்க் காடு பூத்து, |
| ஓர் |
| அரியணைப் பொலிந்தது என்ன, இருந்தனன், |
| அயோத்தி வேந்தன். |
|
அயோத்தி வேந்தன்- அயோத்தி நகருக்கு அரசனான ஸ்ரீராமன்; விரிகடல் நடுவண் பூத்த மின் என ஆரம் வீங்க - அகன்ற கடலின் நடுவில் தோன்றிய மின்னலைப் போல முத்தாரம் மார்பில் தோன்ற; எரி கதிர்க்கடவுள் தன்னை இனமணி மகுடம் ஏய்ப்ப - பிரகாசிக்கிற ஆயிரம் கிரணங்களை உடைய சூரியனைக் கூட்டமான மணிகள் அழுத்திச் செய்யப் பெற்ற கிரீடம் ஒத்திருக்க; கருமுகிற்கு அரசு செந்தாமரை மலர்க்காடு பூத்து - கருமேகத்துக்கு அரசானது செந்தாமரைப் பூக்கள் காடுபோலத் தன்னிடையே பூக்கப் பெற்று; ஓர் அரியணைப் பொலிந்தது என்ன இருந்தனன் - ஒரு சிம்மாசனத்தில் வீற்றிருந்தது என்று சொல்லும்படி வீற்றிருந்தான். |
(2) |
10334. | மரகதச் சயிலமீது வாள் நிலாப் பாய்வது என்ன, |
| இரு குழை இடறும் வேற் கண், இளமுலை, இழை |
| நலார்தம் |