பக்கம் எண் :

 விடை கொடுத்த படலம்627

கரகமலங்கள் பூத்த கற்றை அம் கவரி தெற்ற,

உரகரும், நரரும், வானத்து உம்பரும், பரவி ஏத்த,

  

மரகதச் சயில மீது வாள் நிலாப் பாய்வது என்ன -
பச்சைமணியால் ஆகிய மலையின் மேல் ஒளி நிலா வெள்ளம்
பாய்வது போல; இருகுழை இடறும் வேற்கண், இளமுலை,
இள நலார்தம் கர கமலங்கள் பூத்த கற்றை அம்கவரி தெற்ற
-
இரண்டு   காதணிகளை   முட்டித்தள்ளும் வேல் போன்ற நீண்ட
கண்களையும், இளமுலைகளையும் உடைய இளமையும் அழகும் உடைய
மகளிரது கைகளாகிய     தாமரை மலரில் பூத்த  வெண் சாமரைகள்
மேலே வீசப்பெற; உரகரும் நரரும் வானத்து உம்பரும் பரவி
ஏத்த
-     நாகலோகத்தினரும்,    புனிதர்களும்    தேவலோகத்
தேவரும் பரவித் தோத்திரம் செய்ய.
 

(3)
 

10335.

உலகம் ஈர் - ஏழும் தன்ன ஒளி நிலாப் பரப்ப, வானில்

திலக வாள் நுதல் வெண் திங்கள் சிந்தை நொந்து,

எளிதின் தேய,

கலக வாள் நிருதர் கோனைக் கட்டழித்திட்ட கீர்த்தி

இலகி மேல் நிவந்தது என்ன, எழு தனிக் குடை

நின்று ஏய.

 

திலக வாள் நுதல் - இராமபிரானது திலகம் அணிந்த
ஒளிபடைத்த நெற்றி; உலகம் ஈர்எழும் தன்ன ஒளிநிலாப்
பரப்ப
- பதினான்கு உலகங்களிலும் தனது நிலவொளியைப்
பரவச் செய்தலால்; வானில் வெண் திங்கள் சிந்தை நொந்து
எளிதின் தேய
- வானத்தில் வரும் வெண்ணிலவானது மனம்
வருந்தி மெல்ல மெல்லத் தேய்ந்து போக;  எழுதனிக் குடை-
அரியணைக்கு மேலாக எழுந்துள்ள வெண்கொற்றக் குடையானது;
கலக வாள் நிருதர் தன்னைக் கட்டழித்திட்ட கீர்த்தி இலகி
மேல் நிவந்தது என்ன
- கலகமிடுகின்ற கொடிய அரக்கர்களை
அடியோடு இல்லையாம் படிச் செய்த பெரும்புகழ் விளங்கி மேல்
உயர்ந்துள்ளது போல; நின்று ஏய- நின்று பொருத்தமுற அமைய.
 

புகழ் வெண்மை நிறமாதலின் அது குடைக்கு உவமையாயிற்று.
'திலகவாள் நுதல் போன்ற வெண்திங்கள்' என்று நுதலைத்
திங்களுக்கு அடையாக்கி, குடையின் ஒளி நிலா உலகம் ஈரேழும்
பரவுதலால் திங்கள் சிந்தை நொந்து தேய' எனப் பொருள்
உரைத்தல் சிறந்தது என்பது என்