பக்கம் எண் :

628யுத்த காண்டம் 

குருநாதர் மகாவித்துவான் மயிலம் வே. சிவசுப்பிரமணியன்
அவர்கள் கருத்து.
 

(4)
 

10336.

மங்கல கீதம் பாட, மறையவர் ஆசி கூற,

சங்குஇனம் குமுற, பாண்டில் தண்ணுமை துவைப்ப,

தா இல்

பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப, பொரு கயல் கருங்

கண், செவ் வாய்

பங்கய முகத்தினார்கள் மயில் நடம் பயில மாதோ.

  

மங்கல கீதம் பாட- மங்கலப் பாடல்கள் பாடப்பெற;
மறையவர் ஆசி கூற- அந்தணர்கள் ஆசீர்வாத மொழிகளைக்
கூற; சங்கு இனம் குமுற- சங்கங்கள் ஊதப் பெற; பாண்டில்
தண்ணுமை துவைப்ப
- தாளமும் மத்தளமும் ஒலியைச் செய்ய;
தாஇல் பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப - குற்றமற்ற பலவகையான
வாத்தியங்கள் ஆரவாரிப்ப;பொருகயல், கருங்கண், செவ்வாய்,
பங்கய முகத்தினார்கள்
- பொருகின்ற கயல்மீன் போன்ற கரிய
கண்ணையும், சிவந்த வாயையும்     உடைய  தாமரை  போன்ற
முகத்தினராய மகளிர்கள்; மயில்  நடம்     பயில- மயில் போல
நடனம் ஆடவும்.
 

பாண்டில் - தாளம், மாதோ - அசை.
  

(5)
 

10337.

திரை கடல் கதிரும் நாணச் செழு மணி மகுட கோடி

கரை தெரிவு இலாத சோதிக் கதிர் ஒளி பரப்ப,

நாளும்

வரை பொரு மாட வாயில் நெருக்குற வந்து, மன்னர்

பரசியே வணங்கும்தோறும் பதயுகம் சேப்ப மன்னோ.

 

திரைகடல் கதிரும் நாண- அலைகடலின் மேல் தோன்றுகின்ற
உதய சூரியனும் நாணமுறும் படி; செழுமணி மகுட கோடி- (வணங்க
வந்த மன்னர்களின்) செழுமையான மணிகள் அழுத்திச்     செய்யப்
பெற்ற மகுட வரிசைகள்; கரை தெரிவு   இலாத சோதிக்   கதிர்
ஒளி பரப்ப
- முடிவு காணமுடியாத சோதிப்   பிரகாசத்தை எங்கும்
பரவச் செய்யும்படி; நாளும் வரைபொரு மாட வாயில் நெருக்குற
வந்து
-   நாள்தோறும்    மலையொத்த    அரண்மனை வாயிலில்
நெருக்கித்தள்ளி வந்து; மன்னர் பரசியே