பக்கம் எண் :

 படைக் காட்சிப் படலம்63

உண்டு வெள்ளம் ஓர் எழுபது; மருந்து ஒரு நொடியில் 

கொண்டு வந்தது, மேருவுக்கு அப்புறம் குதித்து. 

 

மண்டு போர் செய, கடலினை மலை கொண்டு கட்டி-
நெருங்கிப் போர் செய்யும் பொருட்டு கடலினை மலை கொண்டு
அடைத்துக் கட்டி; வானரர்  இயற்றிய  மார்க்கம் கண்டிலீர்
கொலாம்
-  (நீவிர்  இகழ்ந்து  கூறிய)  குரங்குகள் ஏற்படுத்திய 
சேதுவாகிய வழியினைக் கண்டிலீரோ? ஓர் எழுபது வெள்ளம் 
உண்டு
-   பகைவரிடம்   (இந்த   வல்லமையுள்ள   குரங்குகள்
கொண்ட) ஓர்  எழுபது வெள்ளம்  சேனை உளது;   மேருவுக்கு 
அப்புறம் குதித்து மருந்து ஒரு நொடியில் கொண்டு வந்தது
-
(அப்படையில் ஒரு குரங்கு) மேரு மலைக்கு அப்புறத்தே குதித்து
ஒரு   நொடிப்   பொழுதில்   (உயிரைத்  தருகின்ற) மருந்தினைக்
கொண்டு வந்தது.
 

மார்க்கம் - வழி. இங்கு சேதுவைக் குறித்தது, கொலாம் -
கொல் ஐயம். 
 

(47)
 

9294.

'இது இயற்கை; ஓர் சீதை என்று இருந்தவத்து 

இயைந்தாள்,

பொது இயற்கை தீர் கற்புடைப் பத்தினி பொருட்டால், 

விதி விளைத்தது; அவ் வில்லியர் வெல்க! நீர்

வெல்க!

முதுமொழிப் பதம் சொல்லினென்' என்று, உரை

முடித்தான்.

 

இது இயற்கை; ஓர் சீதை என்று இருந்தவத்து இயைந்தாள் 
- இது பகைவர் தம் சேனையின் இயல்பு; ஒப்பற்ற சீதை என்று மிக்க
தவத்துடன் கூடியவளான;   பொது   இயற்கை தீர் கற்புடைப்
பத்தினி பொருட்டால்
- பொது இயற்கையொழிந்த (பிறர் எவர்க்கும் 
இல்லாது தனக்கே சிறப்பாக அமைந்த) கற்பினை உடைய ஒரு 
பத்தினியை முன்னிட்டு; விதி விளைத்தது; அவ்வில்லியர் வெல்க, 
நீர் வெல்க
- விதியே (இத்தகு பகையை) விளைவித்தது. அந்த 
வில்லாளர்களே வெற்றி பெறுக  (அன்றி)   நீர் வெற்றி பெறுக; 
முதுமொழிப்பதம் சொல்லினென்  என்று உரை முடித்தான்
 
- முதுவோர் மொழிதற்குரிய சொல்லைச்  சொன்னேன் என்று 
மாலியவான் தன் உரையை முடித்துக் கொண்டான்.