பக்கம் எண் :

630யுத்த காண்டம் 

மயிந்தன், மாதுமிந்தன், கும்பன், அங்கதன், அனுமன்,
மாறுஇல் சயம் தரு குமுதக்கண்ணன், சதவலி, குமுதன், தண்தார்
நயம் தெரி ததிமுகன், கோகசமுகன் முதல நண்ணார் வியந்து
எழும்
- பகைவர்கள் ஆச்சரியப்படும்படியான;      அறுபத்து ஏழு
கோடியாம் வீரரோடும்
-   வானர   சேனைத்      தலைவர்கள்
அறுபத்தேழு கோடியினர். சுக்கிரீவனுடன் வந்தோர்களுடன்.
 

(8)
 

10340.

ஏனையர் பிறரும் சுற்ற, எழுபது வெள்ளத்து உற்ற

வானரரோடும் வெய்யோன் மகன் வந்து வணங்கிச்

சூழ,

தேன் இமிர் அலங்கல் பைந் தார் வீடணக் குரிசில்,

செய்ய

மான வாள் அரக்கரோடு வந்து, அடி வணங்கிச்

சூழ்ந்தான்.

 

ஏனையர் பிறரும் சுற்ற- எழுபது வெள்ளத்துற்ற வானரரோடும்;
வெய்யோன் மகன்-     சுக்கிரீவன்;   வந்து  வணங்கிச் சூழ -
தேன்    இமிர்    அலங்கல்   பைந்தார்  வீடணக் குரிசில் -
வண்டுகள் ஒலிக்கின்ற அசையும் பசிய மாலை   அணிந்த    வீடண
நம்பி; செய்யமான     வாள்   அரக்கரோடும் வந்து    - சீரிய
பெருமை படைத்த கொடிய அரக்கர்களோடும் வந்து; அடிவணங்கிச்
சூழ்ந்தான்
- இராமன் திருவடியை வணங்கிச் சுற்றியிருந்தான்.
 

(9)
 

10341.

வெற்றி வெஞ் சேனையோடும், வெறிப் பொறிப்

புலியின் வெவ் வால்

சுற்றுறத் தொடுத்து வீக்கும் அரையினன், சுழலும்

கண்ணன்,

கல் திரள் வயிரத் திண் தோள் கடுந் திறல்

மடங்கல் அன்னான்,

எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை, குகன்,

தொழுது சூழ்ந்தான்.

 

வெறிப் பொறிப் புலியின் வெவ்வால்- நிறம் அமைத்த
புள்ளிகளை உடைய புலியின் கொடிய வாலை; சுற்றுறத் தொடுத்து
வீக்கும் அரையினன்
- சுற்றி இழுத்துக் கட்டிய இடுப்பை
உடைய; சுழலும் கண்ணன் - சுழல்கின்ற கண்களை உடைய;
கல்திரள்