பக்கம் எண் :

632யுத்த காண்டம் 

பல் நெறிதோறும் தோன்றும் பருணிதர், பண்பின்

கேளிர்,

மன்னவர்க்கு அரசன் பாங்கர், மரபினால்

சுற்றம்ன்னோ.

 

நல்நெறி அறிவு சான்றோர்- சாத்திரங்களிற் கூறப்பட்ட
நல்ல வழிகளால் ஆகிய அறிவான் அமைந்தவர்கள்; நான்மறைக்
கிழவர்
- சதுர் வேத பாரகர்; மற்றைச் சொல் நெறி அறிவு
நீரார்
- வேறுபட்ட பல்துறை அறிவிற்     சிறந்த   தன்மை
உடையவர்கள்; தோம் அறு புலமைச் செல்வர் -  குற்றமற்ற
புலமையால் உயர்ந்தவர்கள்; பல்நெறிதோறும்    தோன்றும்
பருணிதர்
- பல்வகைப்பட்ட சாத்திரங்களினும் நுட்ப   அறிவு
பெற்ற நிபுணர்கள்; பண்பின் கேளிர்-    நற்குணங்களுக்கு
உறைவிடம் ஆனவர் (ஆகியோர்);   மன்னவர்க்கு   அரசன்
பாங்கர்
-   சக்கரவர்த்தியாகிய        ஸ்ரீராமன்     அருகில்;
மரபினால் சுற்ற - அவரவர்க்கு உரிய முறைமைப் படி சுற்றியிருப்ப.
 

மன், ஓ - அசைநிலை.
 

(12)
 

10344.

தேம் படு படப்பை மூதூர்த் திருநகர் அயோத்தி

சேர்ந்த

பாம்பு - அணை அமலன்தன்னைப் பழிச்சொடும்

வணக்கம் பேணி,

வாம் புனல் பரவை ஞாலத்து அரசரும் மற்றுளோரும்

ஏம்பல் உற்று இருந்தார்; நொய்தின், இரு மதி

இறந்தது அன்றே.

 

தேம்பரு படப்பை மூதூர்த் திருநகர் அயோத்தி சேர்ந்த
பாம்பணை அமலன் தன்னைப் பழிச்சொடு வணக்கம் பேணி
-
தேன் சிந்துகின்ற   சோலைகள்  சூழ்ந்த   பழமையான ஊராகிய
அயோத்தி என்னும் திருநகரை வந்தடைந்த ஆதிசேஷ சயனனாகிய
பெரிய பெருமாளைத் தோத்திரம்   செய்து   வணங்கி;வாம்புனல்
பரவை ஞாலத்து அரசரும் மற்றுளோரும்
- தரைமேல் வாவுகின்ற
நீரை உடைய கடலாற் சூழப் பெற்ற   இவ்வுலகத்து   அரசர்களும்
மற்றும் உள்ளவர்களும்; ஏம்பல் உற்று இருந்தார் - மகிழ்ச்சி
அடைந்து இருந்தார்கள் (இவ்வாறு); நொய்தின்-இலேசாக;இருமதி
இறந்தது
- இரண்டு திங்கள் சென்றது.