பக்கம் எண் :

 விடை கொடுத்த படலம்633

'பாம்பணை அமலன்' இட்சுவாகு குலதனமாகிய ஸ்ரீரங்கநாதன்
என்னும் பெரிய பெருமாளாகும்.    திருமாலின்   அவதாரமாகிய
ஸ்ரீராமன் என்றுரைப்பாரும் உளர். அது முன்னும் இப்படலத்துப்
பல இடங்களிலும் வந்துள்ளமையின் பெரிய பெருமாள் என்பதே
இங்குச் சிறப்புடைத்து. அன்று, ஏ - அசைகள்.
 

(13)
 

10345.

நெருக்கிய அமரர் எல்லாம் நெடுங் கடற் கிடை

நின்று ஏத்த,

பொருக்கென அயோத்தி எய்தி, மற்று அவர்

பொருமல் தீர,

வருக்கமோடு அரக்கர் யாரும் மடிதர, வரி வில்

கொண்ட

திருக் கிளர் மார்பினான் பின் செய்தது

செப்பலுற்றாம்:

  

நெருக்கிய அமரர் எல்லாம்- ஒன்று திரண்ட தேவர்கள்
எல்லாம்; நெடுங்கடற்கு இடைநின்று    ஏத்த -    பெரிய
திருப்பாற் கடலின் இடையிலே நின்று துதிக்க;  மற்று அவர்
பொருமல் தீர
- துன்புற்ற அவர்களது துயரம் நீங்கும்படி;
பொருக்கென- விரைவாக; அயோத்தி எய்தி- அயோத்தியை
அடைந்து; அரக்கர் யாரும் வருக்கமொடு மடிதர - அரக்கர்கள்
எல்லாம் தம் கூட்டத்தோடு அழிந்து போக;வரிவில் கொண்ட
திருக்கிளர் மார்பினான்
- கட்டமைந்த   வில்லைக்  கையில்
ஏந்திய திருமகள் விளங்கும் மார்பினனாகிய ஸ்ரீராமன்; பின்
செய்தது செப்பலுற்றாம்
- பின்னால் செய்த செயல்களைக்
கூறத் தொடங்கினோம். இது கவிக்கூற்று.
 

இதனை முன்னர் 184 முதல் 203 வரை உள்ள பாலகாண்டப்
பாடல்களைப் பொருத்தி அறிந்து கொள்க.
 

(14)
 

மறையவர் தானம் கொள்ளல்
 

10346.

மறையவர்தங்கட்கு எல்லாம் மணியொடு முத்தும்

பொன்னும்,

நிறை வளம் பெருகு பூவும், சுரபியும், நிறைத்து,

மேல் மேல்,