பக்கம் எண் :

634யுத்த காண்டம் 

'குறை இது; என்று இரந்தோர்க்கு எல்லாம் குறைவு

அறக் கொடுத்து, பின்னர்,

அறை கழல் அரசர்தம்மை 'வருக' என அருள,

வந்தார்.

  

(இராமன்)-       மறையவர்     தங்கட்கு எல்லாம் -
அந்தணர்க்கெல்லாம்; மணியொடு முத்தும் பொன்னும் -;
நிறைவளம் பெருகு பூவும் சுரபியும் - நிறைந்த வளந்தரக்கூடிய
பூமியும், பசுவும்;நிறைத்து - நிறையும்படிக் கொடுத்து;மேல்
மேல்
- மேலும் மேலும்; 'குறை இது' என்று இரந்தோர்க்
கெல்லாம் குறைவு அறக் கொடுத்து
- தமக்கு இது வேண்டும்
என்று கேட்டவர்களுக்கெல்லாம் அவர்களுடைய குறைவு தீரும்படி
வேண்டுமளவு கொடுத்து; பின்னர்- பிறகு; அறை கழல்
அரசர்தம்மை
- ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த அரசர்களை;
'வருக' என அருள- வருக என்று அழைத்தருள; வந்தார் -
அவர்களும் வந்தார்கள்.
 

(15)
 

இராமன் யாவர்க்கும் விடை கொடுத்தல்
 

10347.

அய்யனும் அவர்கள்தம்மை அகம் மகிழ்ந்து, அருளின்

நோக்கி,

வய்யகம், சிவிகை, தொங்கல், மா மணி மகுடம்,

பொன் பூண்,

கொய் உளைப் புரவி, திண் தேர், குஞ்சரம் ஆடை

இன்ன

மெய் உறக் கொடுத்த பின்னர், கொடுத்தனன்

விடையும் மன்னோ.

  

அய்யனும் - இராமனும்; அவர்கள் தம்மை - அரசர்களை;
அகம் மகிழ்ந்து அருளின் நோக்கி- மனமகிழ்ச்சியுற்று அருளோடு
பார்த்து; வையகம், சிவிகை, தொங்கல்,     மாமணி   மகுடம்,
பொன்பூண், கொய் உளைப் புரவி, திண்தேர், குஞ்சரம், ஆடை
இன்ன -; மெய் உறக் கொடுத்த பின்னர்
- நன்றாக கொடுத்த
பிறகு; விடையும் கொடுத்தனன் - அவர்கள்    தம்மூர்   செல்ல
விடை ஈந்து அனுப்பினான்.
 

மன், ஓ - அசைகள், வையகம் - எதுகை நோக்கி போலியாய்
'வய்யகம்' ஆயிற்று. தொங்கல் - மாலை. குஞ்சரம் - யானை.
இவர்கள் முடிசூட்டுவிழாக் காண வந்தவர்கள்.
 

(16)