10348. | சம்பரன்தன்னை வென்ற தயரதன் ஈன்ற காலத்து |
| உம்பர்தம் பெருமான் ஈந்த ஒளி மணிக் |
| கடகத்தோடும், |
| கொம்புடை மலையும், தேரும், குரகதக் குழுவும், |
| தூசும்,- |
| அம்பரம்தன்னை நீத்தான் - அலரி காதலனுக்கு |
| ஈந்தான். |
|
அம்பரம் தன்னை நீத்தான் - திருப்பாற்கடலைத் துறந்து அயோத்தியில் அவதரித்த இராமபிரான்; சம்பரன்தன்னை வென்ற தயரதன் - இந்திரன் பகையாகிய சம்பரனை வென்ற தயரதசக்கரவர்த்தி; ஈன்ற காலத்து - தன்னைப் பெற்றெடுத்த பொழுது;உம்பர்தம் பெருமான் ஈந்த ஒளிமணிக் கடகத்தோடும் - தேவர் தலைவனாகிய இந்திரன் தனக்குக் கொடுத்த ஒளிபடைத்த மணிகள் அழுத்திய கடகத்தோடும்; கொம்புடைமலையும் - யானைகளும்; தேரும்-; குருகதக் குழுவும்- குதிரைக் கூட்டமும்; தூசும் - பட்டாடையும் (ஆகியவற்றை); அலரி - சூரியனது; காதலனுக்கு - மகனாகிய சுக்கிரீவனுக்கு; ஈந்தான்-. |
(17) |
10349. | அங்கதம் இலாத கொற்றத்து அண்ணலும், அகிலம் |
| எல்லாம் |
| அங்கதன் என்னும் நாமம் அழகுறத் திருத்துமாபோல், |
| அங்கதம் கன்னல் தோளாற்கு அயன் கொடுத்ததனை |
| ஈந்தான்; |
| அங்கு அதன் பெருமை மண்மேல் ஆர் அறிந்து |
| அறையகிற்பார்? |
|
அங்கதம் இலாத கொற்றத்து அண்ணலும்- பழிப்பில்லாத வெற்றியை உடைய இராகவனும்; அகிலம் எல்லாம்- இந்த உலகம் முழுவதும்; அங்கதன் என்னும் நாமம் - அங்கதன் என்ற அவனுடைய பெயரை; அழகுறத் திருத்துமா போல்- அழகு பொருந்த வழங்கச் செய்யுமாறு போல; அங்கதம்- தோள் வளையை; கல்நல் தோளாற்கு அயன் கொடுத்ததனை- கல்போன்ற நல்ல தோளை உடைய இட்சுவாகு மன்னனுக்கு பிரமன் கொடுத்ததாகிய அதனை; ஈந்தான் - (அங்கதனுக்கு) கொடுத்தான்; அங்கு அதன் பெருமை மண்மேல் ஆர் அறிந்து அறையகிற்பார்?- அந்தத் |