வயங்கு சீரான் - விளங்கிய புகழை உடைய இராமன்; என்றலும் - இவ்வாறு கூறுதலும்; வணங்கி, நாணி, வாய் புதைத்து, இலங்கு தானை முன்தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பனை - பணிந்து நாண்முற்று வாயைக் கையால புதைத்துக் கொண்டு விளங்கிய வேட்டி முகப்பினை அடக்கிக் கொண்டு நின்ற வலியோனாகிய அனுமனை; முழுதும் நோக்கி - நன்றாகப் பார்த்து; பொன் திணி வயிரப் பைம்பூண் ஆரமும்- பொன் திணித்துச் செய்யப் பெற்ற பசிய பூணும் முத்துவடமும்; புனை மென் தூசும்- அணிதற்குரிய மெல்லிய பட்டாடையும்; வன்திறல் கயமும் - வலிமிக்க யானையும்; மாவும்- குதிரையும்; வழங்கினன்- ஈந்தான். |
தானை மடக்கலும் வாய்புதைத்தலும் அடக்கம் என்னும் மெய்ப்பாட்டின் அடையாளம் ஆகும். |
(21) |
10353. | பூ மலர்த் தவிசை நீத்து, பொன் மதில் மிதிலை பூத்த |
| தேமொழித் திருவை ஐயன் திருவருள் முகத்து |
| நோக்க, |
| பா மறைக் கிழத்தி ஈந்த பரு முத்த மாலை கைக் |
| கொண்டு |
| ஏமுறக் கொடுத்தான், அந்நாள், இடர் அறிந்து |
| உதவினாற்கே. |
|
ஐயன் - இராமன்; பூ மலர்த் தலிசை நீத்து- தாமரை மலராகிய பீடத்தை வெறுத்து; பொன் மதில் மிதிலை பூத்த தேமொழித் திருவை - பொன்னாற் செய்த மதில் சூழ்ந்த மிதிலையில் தோன்றிய தேன் போலும் மொழியுடைய திருமகளாகிய சீதையை; திருவருள் முகத்து நோக்க- திருவருளோடு கூடிய முகத்தால் பார்க்க; (அவள்) அந்நாள் இடர் அறிந்து உதவினாற்கு- அசோக வனத்தில் தன் துன்பமறிந்து உதவிய அனுமனுக்கு;பாமறைக் கிழத்தி ஈந்த பருமுத்தமாலை கைக்கொண்டு ஏமுறக் கொடுத்தாள்- பரவிய வேதத்தலைவியாகிய சரஸ்வதி தேவி தனக்களித்த முத்து மாலை ஒன்றைக் கையிற் கொண்டு இன்பமுறக் கொடுத்தாள். ஏ - அசை. |
(22) |
10354. | சந்திரற்கு உவமை சான்ற, தாரகைக் குழுவை |
| வென்ற, |
| இந்திரற்கு ஏய்ந்ததாகும் என்னும் முத்தாரத்தோடு |