| கந்து அடு களிறு, வாசி, தூசு, அணிகலன்கள், | | மற்றும் | | உந்தினன், எண்கின் வேந்தற்கு - உலகம் முந்து | | உதவினானே. | | உலகம் முந்து உதவினான்- உலகத்தை முற்காலத்துப் பிரமனால் தந்தருளிய திருமாலின் அவதாரமான இராமன்; சந்திரற்கு உவமை சான்ற- நிலவுக்கு உவமையாகச் சொல்லப்படக் கூடிய; தாரகைக் குழுவை வென்ற- நட்சத்திரக் கூட்டங்களை வென்ற; இந்திரற்கு ஏய்ந்த தாகும் என்னும் முத்தாரத்தோடு- இந்திரன் அணிதற்குப் பொருந்தியதாகும் என்று சொல்லப்படும் முத்து மாலையோடு; கந்து அடுகளிறு, வாசி, தூசு, அணிகலன்கள், மற்றும்- கட்டுத்தறியை அழிக்கும் யானை, குதிரை, பட்டாடை, ஆபரணங்கள், ஏனைய பிறவும்; எண்கின் வேந்தற்கு உந்தினன் - கரடிக் கூட்டத்தின் தலைவனான சாம்பனுக்குத் தந்தான். | (23) | 10355. | நவ மணிக் காழும், முத்தும், மாலையும், நலம் கொள் | | தூசும், | | உவமை மற்று இலாத பொன் பூண் உலப்பு இல | | பிறவும், ஒண் தார்க் | | கவன வெம் பரியும், வேகக் கதமலைக்கு அரசும், | | காதல் | | பவனனுக்கு இனிய நண்பன் பயந்தெடுத்தவனுக்கு | | ஈந்தான். | | காதல் பவனனுக்கு இனிய நண்பன் பயந்து எடுத்தவனுக்கு- அன்பால் காற்றுக்கு இனிய நண்பனாகிய அக்கினி தேவன் மகனாகிய நீலன் என்னும் வானர சேனைத் தலைவனுக்கு; நவமணிக் காழும் - நவமணிகளால் ஆகிய வடமும்;முத்தும் மாலையும் நலங்கொள் தூசும் உவமை மற்று இலாத பொன் பூண் உலப்பு இல பிறவும் - ; ஒண்தார்க் கவன வெம் புரியும் வேகக் கதமலைக்கு அரசும் - ; ஈந்தான் - கொடுத்தான். | தார் - கிண்கிணி மாலை, கவனம் - வேகம். கதமலை - சீற்றமுடைய மலை போன்ற யானை. | (24) |
|
|
|