பக்கம் எண் :

 விடை கொடுத்த படலம்641

உலகெங்கும் பரவும் வடவைத் தீக்கு மூன்று மடங்கு உவமையாகக்
கூடிய மும்மத யானையும்;  மாவும்- குதிரையும்;    தந்தான் -
 

(26)
 

10358.

வளன் அணி கலனும் தூசும், மா மதக் களிறும்,

மாவும்,

நளனொடு குமுதன், தாரன், நவை அறு பனசன், 

மற்றோர்

உளம் மகிழ்வு எய்தும் வண்ணம் உலப்பில பிறவும்

ஈந்தான் -

களன் அமர் கமல வேலிக் கோசலக் காவலோனே.

 

களன் அமர் கமல வேலிக்       கோசலக் காவலோன்-
நெற்களங்கள் நிரம்பியுள்ள தாமரைப்    பூ வேலியை    உடைய
கோசல நாட்டரசனாய இராமன்;நளனொடு குமுதன், தாரன், நவை
அறு பனசன், மற்றோர் உளம் மகிழ்வு எய்தும் வண்ணம் - ;
வளன் அணி கலனும் தூசும் மாமதக் களிறும் மாவும்
- உலப்பில
பிறவும் - கணக்கில்லாத மற்றைப் பொருள்களையும்; ஈந்தான்-.
 

(27)
 

10359.

அவ் வகை அறு பத்து ஏழு கோடியாம் அரியின்

வேந்தர்க்கு

எவ் வகைத் திறனும் நல்கி, இனியன பிறவும் கூறி,

பவ்வம் ஒத்து உலகில் பல்கும் எழுபது வெள்ளம்

பார்மேல்

கவ்வை அற்று இனிது வாழக் கொடுத்தனன்,

கடைக் கண் நோக்கம்.

 

(இராமன்) அவ்வகை- அவ்வாறு; அறுபத்து ஏழு கோடியாம்
அரியின் வேந்தர்க்கு - அறுபத்தேழு கோடி என்னும் கணக்கினை
உடைய குரங்கு அரசர்களுக்கு;     எவ்வகைத் திறனும் நல்கி -
எல்லாவகைப் பட்ட பொருளும் கொடுத்து; இனியன பிறவும் கூறி
- பிரிய வசனங்களையும் சொல்லி; பவ்வம்    ஒத்து   உலகில்
பல்கும் எழுபது வெள்ளம்
- கடல்   நீரைப்   போல வற்றாது
உலகில் பெருகும் எழுபது வெள்ளம்  குரங்குகள்; பார்மேல் -
உலகில்; கவ்வை அற்று இனிது வாழ- துன்பமின்றி; நன்றாக
வாழும்படி; கடைக்கண் நோக்கம்- தனது கடைக்கண் பார்வையாகிய
திருவருளைக:் கொடுத்தனன் - கொடுத்தான்.
 

(28)