10360. | மின்னை ஏர் மௌலிச் செங் கண் வீடணப் புலவர் |
| கோமான் - |
| தன்னையே இனிது நோக்கி, 'சராசரம் சுமந்த |
| சால்பின் |
| நின்னையே ஒப்பார் நின்னை அலது இலர், உளரேல்; |
| ஐய! |
| பொன்னையே இரும்பு நேரும்ஆயினும் பொரு அன்று' |
| என்றான். |
|
(இராமன்) - மின்னை ஏர் மௌலிச் செங்கண் வீடணப் புலவர் கோமான் தன்னையே இனிது நோக்கி - மின்னலை ஒத்த கிரீடத்தை அணிந்த சிவந்த கண்களை உடைய வீடணன் என்னும் அறிஞர்க்கரசனை அன்பொழுகப் பார்த்து;'ஐய! சராசரம் சுமந்த சால்பின் - ஐயனே! உலகமுழுதும் தாங்கிய சான்றாண்மையை உடைய; நின்னையே ஒப்பார் நின்னை அலது இலர் - உன்னைப் போன்றவர்கள் நீயே அல்லாமல் வேறு யாரும் இலர்;உளரேல் - அப்படி இருப்பதாகக் கூறினால் (அது எவ்வாறாகும் எனின்); பொன்னையே இரும்பு நேரும் ஆயினும் பொரு அன்று என்றான் - பொன்னை ஒருகாலத்து இரும்பு ஒத்துவிடும் ஆனாலும் உனக்கு ஒப்பல்ல என்றான். |
(29) |
10361. | என்று உரைத்து, அமரர் ஈந்த எரி மணிக் |
| கடகத்தோடு |
| வன் திறல் களிறும், தேரும், வாசியும், மணிப் |
| பொன் பூணும், |
| பொன் திணி தூசும், வாசக் கலவையும், புது மென் |
| சாந்தும், |
| நன்று உற, அவனுக்கு ஈந்தான் - நாகணைத் |
| துயிலைத் தீர்ந்தான். |
|
நாகணைத் துயிலை தீர்ந்தான் - பாம்பணைத் துயிலை நீங்கி அவதரித்த இராமன்; என்று உரைத்து- என்று வீடணனைப் பாராட்டிக் கூறி; அவனுக்கு- அந்த வீடணனுக்கு; நன்று உற- நன்மை பொருந்த; அமரர் ஈந்த எரிமணிக் கடகத்தோடு- தேவர்கள் கொடுத்த ஒளிவீசும் மணிகள் அழுத்திய கடகத்தோடு; வன்திறல் |