களிறும் தேரும் வாசியும் மணிப்பொன் பூணும் பொன்திணி தூசும் வாசக் கலவையும் புதுமென் சாந்தும் - ; ஈந்தான்-. |
(30) |
10362. | சிருங்கபேரம்அது என்று ஓதும் செழு நகருக்கு |
| இறையை நோக்கி, |
| 'மருங்கு இனி உரைப்பது என்னோ, மறு அறு |
| துணைவற்கு?' என்னா, |
| கருங் கைம் மாக் களிறும், மாவும், கனகமும், தூசும், |
| பூணும், |
| ஒருங்குற உதவி, பின்னர் உதவினன் விடையும் |
| மன்னோ. |
|
(இராமன்) சிருங்க பேரம் அது என்று ஓதும் செழுநகர்க்கு இறையை நோக்கி - குகனைப் பார்த்து; 'மறு அறு துணைவற்கு மருங்கு இனி உரைப்பது என்னோ?'; என்னா- குற்றமற்ற சகோதரனாய உனக்கு இப்போது சொல்ல வேண்டியது யாது உள்ளது என்று சொல்லி; கருங்கை மாக்களிறும் மாவும் கனகமும் தூசும் பூணும் -; ஒருங்குற உதவி - சேரக் கொடுத்து;பின்னர் விடையும் உதவினன்- பிறகு ஊர் செல்ல உத்தரவும் கொடுத்தான். மன், ஓ - அசைகள். |
(31) |
10363. | அனுமனை, வாலி, சேயை, சாம்பனை, அருக்கன் |
| தந்த |
| கனை கழல் காலினானை, கருணை அம் கடலும் |
| நோக்கி, |
| 'நினைவதற்கு அரிது நும்மைப் பிரிக என்றல்; நீவிர் |
| வைப்பும் |
| எனது; அது காவற்கு இன்று என் ஏவலின் ஏகும்' |
| என்றான். |
|
கருணை அம்கடலும்- அருட்கடலாய் விளங்கும் இராமபிரானும்; அனுமனை வாலிசேயை சாம்பனை அருக்கன் தந்த கனைகழல் காலினானை; நோக்கி - பார்த்து; 'நும்மை பிரிக என்றல் நினைவதற்கு அரிது- உங்களைப் பிரிந்து செல்க என்று கூறுதல் கூற நினைப்பதற்கே முடியாத செயல் ஆகும் (ஆனாலும்); நீவிர் வைப்பும் எனது - உங்கள் நாடுகளும் தற்போது என்னுடையதே |