அல்லவா (ஆதலின்);அது காவற்கு - அந் நாடுகளைக் காப்பதற்கு; இன்று என் ஏவலின் ஏகும்- இன்று என் கட்டளையை மேற்கொண்டு செல்லுங்கள்;என்றான்-. |
(32) |
10364. | இலங்கை வேந்தனுக்கும் இவ்வாறு இனியன யாவும் |
| கூறி, |
| அலங்கல் வேல் மதுகை அண்ணல் |
| விடைகொடுத்தருளலோடும், |
| நலம் கொள் பேர் உணர்வின் மிக்கோர், நலன் உறும் |
| நெஞ்சர், பின்னர்க் |
| கலங்கலர், 'ஏய செய்தல் கடன்' எனக் கருதிச் |
| சூழ்ந்தார். |
|
இலங்கை வேந்தனுக்கும்- வீடணனுக்கும்; இனியன யாவும் இவ்வாறு கூறி - பிரிய வார்த்தைகளை இவ்வாறே சொல்லி; அலங்கல் வேல் மதுகை அண்ணல்-மாலையணிந்த வேலினையுடைய; வலிமிக்க இராமபிரான்; விடை கொடுத்தருளலோடும் - உத்திரவு கொடுத்துப் புறப்படச் சொல்லிய அளவில்; நலம்கொள் பேருணர்வின் மிக்கோர்- நன்மை கொண்ட மெய்யுணர்வால் சிறந்த அவர்கள்; நலன் உறும் நெஞ்சர்- ஆறுதல் அடைந்த மனம் உடையராய்; பின்னர்க் கலங்கலர்- பிறகு தடுமாற்றம் அடையாதவராய்; 'ஏய செய்தல் கடன்'- இராமபிரான் ஏவிய பணியைச் செய்தல் தமக்குரிய கடமை; எனக் கருதிச் சூழ்ந்தார் - என்று கருதிப் புறப்பட முடிவு செய்தார்கள். |
(33) |
10365. | பரதனை, இளைய கோவை, சத்துருக்கனனை, பண்பு |
| ஆர் |
| விரத மா தவனை, தாயர் மூவரை, மிதிலைப் |
| பொன்னை, |
| வரதனை, வலம்கொண்டு ஏத்தி, வணங்கினர் |
| விடையும் கொண்டே, |
| சரத மா நெறியும் வல்லோர் தத்தம பதியைச் |
| சார்ந்தார். |
|
சரதமா நெறியும் வல்லோர்- என்றும் நிச்சயமான பரமபத நெறிக்கும் வல்லோராகிய அவர்கள்; பரதனை இளைய கோவை |