பக்கம் எண் :

 விடை கொடுத்த படலம்645

சத்துருக்கனனை பண்பு ஆர் விரத மாதவனை தாயர் மூவரை
மிதிலைப் பொன்னை வரதனை
- வலம் கொண்டு ஏத்தி - சுற்றி
வந்து தோத்தரித்து; வணங்கினர் விடையும் கொண்டு- வணங்கி
விடை பெற்று;  தத்தம பதியைச்  சார்ந்தார்- தங்கள் தங்கள்
நகரங்களை அடைந்தார்கள்.
 

இராமனை முதலாகக் கொண்டு பரதனைச் சந்தித்த அவர்கள்
விடைபெறும் போது பரதனை முதலாக இராமனாகிய வரதனை
இறுதியாக வலம் கொண்டு ஏத்திச் சென்றதாகக் கூறியது ஓர் நயம்.
தத்தமபதி - சிருங்க பேரம், கிட்கிந்தை, இலங்கை என்று
அவரவர் நகரம்.
 

(34)
 

10366.

குகனைத் தன் பதியின் உய்த்து, குன்றினை வலம்

செய் தேரோன்

மகனைத் தன் புரத்தில் விட்டு, வாள் எயிற்று

அரக்கர் சூழ,

ககனத்தின்மிசையே ஏகி, கனை கடல் இலங்கை

புக்கான், -

அகன் உற்ற காதல் அண்ணல், அலங்கல் வீடணன்,

சென்று, அன்றே.

 

அகன் உற்ற காதல் அண்ணல் அலங்கல் வீடணன்-
நெஞ்சார்ந்த அன்புடைய     பெரியோனாகிய மாலை அணிந்த
வீடணன்; வாள் எயிற்று அரக்கர் சூழ - கூரிய பல்லினை உடைய
அரக்கர்கள் தன்னைச்     சுற்ற;    ககனத்தின் மிசையே ஏகி -
(புட்பக விமானத்தில் அனைவரையும் அழைத்துக் கொண்டு; ஆகாய
வழியாகச் சென்று. குகனைத் தன் பதியின் உய்த்து
- குகனை
அவன் நகராகிய சிருங்க பேரத்தில் கொண்டு விட்டு; குன்றினை
வலம் செய் தேரோன் மகனை
- மகாமேரு மலையைச் சுற்றி வரும்
தேரினையுடைய சூரியன் மகனாகிய சுக்கிரீவனை; தன்புரத்தில் விட்டு
- அவன் நகராகிய கிட்கிந்தையில் கொண்டுவிட்டு; அன்றே சென்று -
அன்றைக்கே   போய்;   இலங்கை புக்கான்-     இலங்காபுரியைச்
சென்றடைந்தான்.
 

'சென்று புக்கான்' என இயைத்து, அன்றே அசை எனினும் ஆம்.
  

(35)