பக்கம் எண் :

646யுத்த காண்டம் 

இராமன் இனிது அரசாட்சி நடத்தல்
 

10367.

அய்யனும் அவரை நீக்கி, அருள் செறி

துணைவரோடும்

வய்யகம் முழுதும் செங்கோல் மனு நெறி முறையில்

செல்ல,

செய்ய மா மகளும் மற்றச் செகதல மகளும் சற்றும்

நய்யுமாறு இன்றிக் காத்தான், நானிலப் பொறைகள்

தீர்த்தே.

 

அய்யனும்- இராமபிரானும்; அவரை நீக்கி - அவர்களை
அனுப்பிய பிறகு; அருள் செறி துணைவரோடும் - தன்னருள்
நிரம்பிய பரத இலக்குவ சத்துருக்கனர்களோடும் கூடி; வய்யகம்
முழுதும்
- உலகம் முழுவதும்; செங்கோல் மனு நெறி முறையில்
செல்ல
- தன் அரசாட்சியாகிய செங்கோல் நீதி    நெறிமுறைப்படி
நடவா நிற்ப; செய்ய மாமகளும்- திருமகளும்; மற்றச் செகதல
மகளும்
- பூமகளும்; சற்றும் நையுமாறு இன்று-    சிறிதும்
வருத்தமுறாமல்; நானிலப் பொறைகள் தீர்த்து-பூமியின் சுமைகளை
நீக்கி, காத்தான் -
 

திருமகளுக்கு வருத்தம் தீயோரைச் சார்தல். பூமகளுக்கு
வருத்தம் பிணி பகை மிகுதல் - நிலப் பொறை தீர்த்தல் -
வசீகரமும் வளமும் மிகப் பெற மழை அளவுபடப் பெறுதலாகும்.
இராம ராஜ்யம் இவ்வாறு இருந்தது என்றதாம்.
 

(36)
 

10368.

உம்பரோடு இம்பர்காறும், உலகம் ஓர் ஏழும் ஏழும்,

'எம் பெருமான்!' என்று ஏத்தி, இறைஞ்சி நின்று,

ஏவல் செய்ய,

தம்பியரோடும், தானும், தருமமும், தரணி

காத்தான் -

அம்பரத்து அனந்தர் நீங்கி, அயோத்தியில் வந்த

வள்ளல்.

 

அம்பரத்து - திருப்பாற்கடலில்;    அனந்தர்   நீங்கி -
அறிதுயிலிலிருந்து விலகி; அயோத்தியில்   வந்த வள்ளல் -
அயோத்தியில் ஸ்ரீராமனாக அவதரித்து பலர்க்கும் அருள் செய்த
இராமபிரான்; உம்பரோடு    இம்பர் காறும் -    தேவர் முதல்
மக்கள் வரை; உலகம் ஓர் ஏழும் ஏழும் - பதினான்கு உலகங்களும்;