பக்கம் எண் :

648யுத்த காண்டம் 

மிகைப் பாடல்கள்

28. இராவணன் சோகப் படலம்

 
902.

தொழும்பு செய்து உளர் ஆம் தேவர் துயரினர்

போலத் தாமும்

பழங்கண் உற்று, உடைய வேந்தன் இணை அடி

விடாது பற்றி,

உளம் களிப்புறுவோர் ஓயாது அழுதனர்; மைந்தன்

ஆவி

இழந்தனன் என்னக் கேட்டு, ஆங்கு, இடி உறும்

அரவை ஒத்தாள்.

(43-1)
 
903.

உம்பரின் உலவும் தெய்வ உருப்பசி முதல் ஆய
ஐம்பது கோடி தெய்வத் தாதியர் அழுது சூழ்ந்தார்;
தும்பியின் இனத்தை எல்லாம் தொலைத்திடும்

குருளை மாய,

கம்பம் உற்று, அரியின் பேடு கலங்கியது என்னச்

சோர்ந்தாள்.

(43-2)
 
904.

பத்து எனும் திசையும் வென்று, கயிலையில் பரனை

எய்தி,

அத் தலை அமர் செய்து, ஆற்றான்; அவன் இடத்து

உமை அன்பால் தன்

கைத்தலக் கிளி நிற்கு ஈய, கவர்ந்து எனக்கு

அளித்து நின்ற

வித்தகக் களிறே! இன்னும் வேண்டினேன்,

எழுந்திராயே!

(50-1)
 

905.

'மஞ்சு அன மேனி வள்ளல் வளரும் நாள், மன்னர்

தோள் சேர்

நஞ்சு அன விழியால் அன்றி, நகை மணிப் புதல்வர்,

நல்லோர்,