பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்649

செஞ் சிலை மலரால் கோலித் திரிந்தவா என்னில்,

செல்லும்,

வெஞ் சமர் இன்னும் காண வல்லனோ விதி

இலாதேன்!'

(52-1)
 

29. படைக் காட்சிப் படலம்

 
906.

தொல்லை சேர் அண்ட கோடித் தொகையில் மற்று

அரக்கர் சேனை

இல்லையால் எவரும்; இன்னே எய்திய இலங்கை

என்னும்

மல்லல் மா நகரும் போதா; வான் முதல் திசைகள்

பத்தின்

எல்லை உற்றளவும் நின்று, அங்கு எழுந்தது, சேனை

வெள்ளம்.

(2-1)
 
907.

மேய சக்கரப் பொருப்பிடை மேவிய திறலோர்,
ஆயிரத் தொகை பெருந் தலை உடையவர், அடங்கா
மாயை கற்றவர், வரத்தினர், வலியினர், மறப் போர்த்
தீயர், இத் திசை வரும் படை அரக்கர் - திண்

திறலோய்!

(22-1)
 
908.

சீறு கோள் அரி முகத்தினர்; திறற் புலி முகத்து

ஐஞ் -

ஞூறு வான் தலை உடையவர்; நூற்றிதழ்க் கமலத்து
ஏறுவான் தரும் வரத்தினர்; ஏழ் பிலத்து உறைவோர்,
ஈறு இலாத பல் அரக்கர்; மற்று எவரினும் வலியோர்.

(25-1)
 
909.

சாலும் மா பெருந் தலைவர்கள் தயங்கு எரி நுதற்

கண்

சூலபாணிதன் வரத்தினர், தொகுத்த பல் கோடி
மேலையாம் அண்டத்து உறைபவர், இவர் பண்டு

விறலால்

கோல வேலுடைக் குமரனைக் கொடுஞ் சமர்

துரந்தோர்.

(27-1)