பக்கம் எண் :

650யுத்த காண்டம் 

910.

ஆதி அம் படைத் தலைவர்கள், வெள்ளம் நூறு; அடு

போர்

மோது வீரர், மற்று ஆயிர வெள்ளம்; மொய்

மனத்தோர்

'காது வெங் கொலைக் கரி, பரி, கடுந் திறல்

காலாள்,

ஓது வெள்ளம் மற்று உலப்பு இல கோடி' என்று

உரைப்பார்.

(30-1)
 
911.

அன்னது அன்றியும், ஆழி நீர்க்கு அப் புறத்து

உலகில்,

துன்னுறும் சத கோடி வெள்ளத் தொகை அரக்கர் -
தன்னை ஓர் கணத்து எரித்தது, சலபதி வேண்ட,
மன் இராகவன் வாளி ஒன்று; அவை அறிந்திலிரோ?

(43-1)
 

30. மூலபல வதைப் படலம்

 
912.

போனபின், பல புவனம் என்று உரைக்கின்ற பொறை

சேர்

ஆன அண்டங்கள் எவற்றினும் அமர்ந்திடும் மூலத்
தானைதன்னையும், 'எழுக' எனச்

சாற்றினர் - தறுகண்

கோன் உரைத்தமை தலைக்கொளும் கொடும்

படைத்தலைவர்.

(3-1)
 
913.

மூன்றின் நூற்றினோடு ஆயிரம் முள்வன் வெள்ளம்
ஆன்ற தேர், பரி, கரியவை, ஆளையும், அடங்கி,
மூன்று லோகமும் முற்றும் போய் முடிவுறும் என்ன
ஏன்று சென்றது., அவ் இராமன்மேல், இராக்கதப்

பரவை.

(23-1)
 
914.

'தான் அல்லாது ஒரு பொருள் இலை எனத் தகும்

முதல்வன் -

தான் இராமன் என்று எழில் உரு எடுத்ததும்

தவறோ?