| தான் எம்மோடு பல் புவனங்கள் தனி வயிற்று | |
| அடக்கும் | |
| தானம் மேவினர்க்கு இவர் ஒரு பொருள் எனத் | |
| தகுமோ? | (26-1) |
|
915. | 'நின்று காண்குதிர், இறைப் பொழுது; இங்கு நீர் | |
| வெருவல்; | |
| இன்று இராகவன் பகழி மற்று இராக்கதப் புணரி கொன்று வற்றிடக் குறைத்து உயிர் குடிக்கும்' என்று | |
| அமரர்க்கு | |
| அன்று முக்கனான் உரைத்தல் கேட்டு, அவர் உளம் | |
| தெளிந்தார். | (26-2) |
|
916. | வானின் மேவிய அமரருக்கு இத் துணை மறுக்கம் ஆனபோது, இனி அகலிடத்து உள்ள பல் உயிர்கள் ஈனம் எய்தியது இயம்பல் என்? எழுபது வெள்ளத் தானை ஆகிய கவிப் படை சலித்தது, பெரிதால். | |
| | (26-3) |
|
917. | வாய் உலர்ந்தன சில சில; வயிறு எரி தவழ்வுற்று ஓய்தல் உந்தின சில சில; ஓடின நடுங்கிச் சாய்தல் உந்தின சில சில; தாழ் கடற்கு இடையே பாய்தல் உந்தின சில சில - படர் கவிப் படைகள். | |
| | (29-1) |
|
918. | அனுமன் ஆற்றலும், அரசனது ஆற்றலும், இருவர் தனுவின் ஆற்றலும், தங்களைத் தாங்குவர் தாங்கார், 'கனியும் காய்களும் உணவு உளோ; மலை உள | |
| காக்க | |
| மனிதர் ஆளில் என், இராக்கதர் ஆளில் என், | |
| வையம்?' | (44-1) |
|
919. | என்று, சாம்பவன் முதலிய தலைவர்கள் இயம்ப, குன்று உலாம் புயத்து அங்கதன் குறுநகை புரிந்தே, | |