பக்கம் எண் :

652யுத்த காண்டம் 

'நன்று நும் உரை; நாயகர்ப் பிழைத்து, நம் உயிர்

கொண்டு,

ஒன்றி வாழ்தலும் உரிமையதே?' என உரைப்பான்.

(44-2)
 
920.

'ஆளி மா முகவர், சீறும் அடு புலி முகவர், மிக்க
யாளி மா முகவர், யானை முகவர், மற்று எரியும்

வெங் கண்

கூளி மா முகவர் ஆதி அளப்பு இல கோடி உள்ளார்;
ஊழி சென்றாலும் உட்கார்; ஒருவர் ஓர் அண்டம்

உண்பார்.

(52-1)
 
921.

என்று எடுத்து, எண்கின் தானைக்கு இறையவன்

இயம்பலோடும்

வன் திறல் குலிசம் ஓச்சி, வரைச் சிறகு அரிந்து,

வெள்ளிக்

குன்றிடை நீலக் கொண்மூ அமர்ந்தென, மதத் திண்

குன்றில்

நின்றவன் அளித்த மைந்தன் மகன் இவை

நிகழ்த்தலுற்றான்.

(54-1)
 
922.

'இசைந்தனன் அமருக்கு; எல்லா உலகமும்

இமைப்பின் வாரிப்

பிசைந்து, சிற்றுதரத்து உண்ணப்பெற்ற நாள் பிடித்த

மூர்த்தம்

இசைந்தது போலும்!' என்று, ஆங்கு, அயன் சிவன்

இருவர் தத்தம்

வசம் திகழ் கருத்தினூடே மதித்திட, வயங்கி

நின்றான்.

(69-1)
 
923.

மற்றும் வேறு அறத்துள் நின்ற வான நாடு

அணைந்துளோர்,

'கொற்ற வில்லி வெல்க! வஞ்ச மாயர் வீக!

குவலயத்து