பக்கம் எண் :

 மிகைப் பாடல்கள்653

உற்ற தீமை தீர்க, இன்றொடு!' என்று கூறினார்;

நிலம்

துற்ற வெம் படைக் கை நீசர் இன்ன இன்ன

சொல்லினார்:

(72-1)
 
924.

அரைக் கணத்து அரக்கர் வெள்ளம் அளவு இல்

கோடி ஆவி போய்த்

தரைப் பட, பல் அண்ட கோடி தகர, அண்ணல்தன்

கை வில்

இரைக்கும் நாண் இடிப்பினுக்கு உடைந்து, 'இராம

ராம!' என்று

உரைக்கும் நாமமே எழுந்து, உம்பரோடும் இம்பரே.

(76-1)
 
925.

சிரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர்; செஞ் சுடர்ப்

படைக்

கரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர்; கல்லை வெல்லு

மா

உரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர்; ஊழி காலம்

வாழ்

வரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர்; - மண்ணின் மீது

அரோ.

(76-2)
 
926.

அண்ட கோளம் எண் திசாமுகங்கள் எங்கும் ஆகியே,
மண்டி மூடி வாழ் அரக்கர்தாமும், வாகை வீரன்மேல்,
கொண்டல்எழும், ஊழிவாய், ஓர் குன்றில் மாரி

பொழிவபோல்

சண்ட வேகம் ஏறி, வாளி மழை சொரிந்து

தாக்கினார்.

(83-1)
 
927.

தேரின்மீது அனந்த கோடி நிருதர், சீறு செம் முகக்
காரின்மீது அனந்த கோடி வஞ்சர், காலின் வாவு

மாத்

தாரின்மீது அனந்த கோடி தறுகண் நீசர், தாழ்வு

இலாப்

பாரின்மீது அனந்த கோடி பதகர், வந்த பற்றினார்.

(83-2)